தமிழக சட்டசபை -கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மீதான மானியக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் முதல் கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று முதல் மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்றில் இருந்து நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Tamilnadu assembly budget session Live Updates: Second sitting to convene from today

Apr 08, 2022, 12:27 pm IST

கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பை சட்டசபையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி
Apr 08, 2022, 11:22 am IST

JUSTIN | சட்டசபையில் அமைச்சர் பேச்சு! tamil.oneindia.com | #TNAssembly | #MRKPanneerselvam | #Oneindiatamilupdates
Apr 08, 2022, 11:12 am IST

விவசாயக் கல்லூரி அமைப்பதில் உள்ள சிக்கல் நிலப்பிரச்சனை தான்; ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க 110 ஏக்கர் நிலம் வேண்டும்; டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நினைத்தால் அவரே மன்னார்குடியில் விவசாயக் கல்லூரியை தொடங்கலாம் -அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
Apr 08, 2022, 11:11 am IST

4 கேள்வி கூட முடியவில்லை, அதற்குள் 42 நிமிடங்கள் ஆகிவிட்டது; இதனால் உறுப்பினர்களும், அமைச்சர்களும் சுருக்கமாக பேச வேண்டும் -சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்
Apr 08, 2022, 11:11 am IST

மன்னார்குடியில் நம்மாழ்வர் பெயரில் விவசாயக் கல்லூரி அமைத்து தர வேண்டும் -டி.ஆர்.பி.ராஜா சட்டசபையில் கோரிக்கை
Apr 08, 2022, 10:21 am IST

சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தாமதமாவதற்கு காரணம் நிலம் கையகப்படுத்துதல் தான் என சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்; நிலம் எடுப்பு பணிகளுக்காக மட்டும் வருவாய் துறையில் 5 டி.ஆர்.ஓ.க்கள் தலைமையில் 144 ஸ்பெஷல் தாசில்தார்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் -அமைச்சர் எ.வ.வேலு.
Apr 08, 2022, 10:16 am IST

மணப்பாறை நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டஅறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்த பிறகு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்; மணப்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்படும் -சட்டசபையில் அமைச்சர் வேலு உறுதி
Apr 08, 2022, 10:12 am IST

அனைத்து தொகுதிகளிலும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -அமைச்சர் பொன்முடி
Apr 07, 2022, 2:17 pm IST

JUSTIN | “வன்னியர் இடஒதுக்கீடு ரத்துக்கு அதிமுகதான் காரணம்”
Apr 07, 2022, 11:53 am IST

JUSTIN | “சமூக நீதிக்கான சட்டப்போராட்டத்தில் 3-வது வெற்றி”
Apr 07, 2022, 11:48 am IST

முதலமைச்சர் நினைத்தால் ஒரு உத்தரவிலேயே நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தர முடியும் -வேல்முருகன்
Apr 07, 2022, 11:42 am IST

வன்னியர் மக்களை வாழ வைத்த அரசு திமுக அரசு -வேல்முருகன் சட்டசபையில் பேச்சு
Apr 07, 2022, 11:42 am IST

தமிழகத்திற்கு மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதி கோரவில்லை; ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் -காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை
Apr 07, 2022, 11:40 am IST

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ,நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது- சட்டசபையில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின். உரிய தரவுகளின் அடிப்படையில் தீர்ப்பு வந்ததுள்ளது- ஸ்டாலின். திமுக அரசு அமைந்த பிறகு சமூக நீதியை காக்கும் வகையில் கிடைத்த 3 வது வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Apr 07, 2022, 11:38 am IST

சமூக நீதிக்காக போராடுபவர்களை இனி வரும் நாட்களிலாவது நீதிமன்றம் ஏமாற்ற வேண்டாம் என தமிழக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேச்சு -நீதிமன்றம் பற்றி பேசியதற்கு சபாநாயகர் அப்பாவு கடும் ஆட்சேபனை
Apr 07, 2022, 11:35 am IST

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு -சமூக நீதிக்கான சட்டப்போராட்டத்தில் 3-வது வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு
Apr 07, 2022, 11:10 am IST

LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நகராட்சி நிர்வாகம் & ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை
Apr 07, 2022, 10:54 am IST

ஆகம விதிகளுக்கு உட்படுமேயானால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தங்க கலசம் அமைத்து தரப்படும் -சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்
Apr 07, 2022, 10:15 am IST

சட்டசபையில் என்னை புகழ்ந்து பேசாதீர்கள் -முதலமைச்சர் ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள்
Apr 07, 2022, 10:08 am IST

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது - இன்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை மானியக் கோரிக்கை. சட்டசபையில் கேள்வி பதில் நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
Apr 06, 2022, 2:51 pm IST

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 1,000 செக் டேம்கள் கட்டப்படும் -அமைச்சர் துரைமுருகன். செக் டேம்கள் கட்டப்படும் திட்டத்தை திமுக அரசு ஒரு போதும் கைவிடாது -நீர்வளத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் உறுதி
Apr 06, 2022, 12:18 pm IST

கண்டிக்கிறோம கண்டிக்கிறோம்... சட்டசபை வாசலில் அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கம். சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபை வாசலில் முழக்கமிட்டனர்
Apr 06, 2022, 12:17 pm IST

கொரோனா தொற்றினால் மக்கள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர் - எடப்பாடி பழனிச்சாமி. சொத்து வரியை உயர்த்தினால் மக்களின் மீது சுமை கூடும். உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம் - எடப்பாடி பேட்டி
Apr 06, 2022, 12:05 pm IST

சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சொத்து வரியை உயர்த்தியது ஏன் என சட்டசபையில் மு.க ஸ்டாலின் விளக்கம். சொத்துவரியை மனமுவந்து உயர்த்தவில்லை - முதல்வர் ஸ்டாலின் விளக்கம். உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையில் இருப்பதால் சமாளிக்கவே வரி உயர்த்தப்பட்டது
Apr 06, 2022, 11:20 am IST

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ரூ.68,375 கோடி முதலீடும் 2 லட்சத்து 5,802 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன - 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Apr 06, 2022, 11:19 am IST

சட்டபேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் உரை

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இது வரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. 25 மாவட்டங்களில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின்
Apr 06, 2022, 11:09 am IST

ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட கடற்கரை கிராமமான கூத்தங்குழியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருமாறு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை
Apr 06, 2022, 11:09 am IST

தமிழகத்தில் 2,282 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8,713 துணை சுகாதார நிலையங்களும், 272 வட்டார மருத்துவமனைகளும், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும் இயங்கி கொண்டிருக்கிறது -அமைச்சர் மா.சுப்ரமணியன்
Apr 06, 2022, 11:09 am IST

தொலைதூர கிராமங்களுக்கும் மருத்துவச் சேவை அளிக்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் நாளை மறுதினம் தொடங்கி வைக்கவுள்ளார் -அமைச்சர் மா.சுப்ரமணியன்
Apr 06, 2022, 10:59 am IST

30,000 மக்கள் தொகைக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மற்றொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் குறைந்தது 8 கி.மீ. தொலைவு இருக்க வேண்டும் என்ற நியதியின் அடிப்படையிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன - அமைச்சர் மா.சுப்ரமணியன்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+