சனாதனம், சட்டம் ஒழுங்கு.. அனல் பறக்குமா அக்டோபரில் கூடும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை பாஜக தீவிரமாக கையில் எடுத்துள்ள நிலையில் அதுகுறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அது போல் அமைச்சர்கள் பலர் பேசும் கருத்துகள் மீது எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வது உள்ளிட்ட பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் தற்போது அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

அதாவது கடந்த மார்ச் மாதம் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடரானது தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி முடிந்தது. இந்த கூட்டத் தொடரின் போது ஆளுநர் உரை, நிதி நிலை அறிக்கை, மானியக் கோரிக்கை மீதான விவாதம் என 26 நாட்கள் நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தொடர் நடந்து முடிந்த 6 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு கூட்டத் தொடரை கூட்ட வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் 3 , 4 ஆகிய தேதிகளில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு முடிந்தவுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறித்தும் டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சர் பதவியில் உள்ளது குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத் தொடருக்கு முன்பு அமைச்சரவையும் கூடவுள்ளது. சட்டம் ஒழுங்கு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சட்டசபையில் அதிமுக எழுப்ப திட்டமிட்டுள்ளது. அது போல் சனாதன சர்ச்சை குறித்து பாஜக எழுப்ப திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறித்த கோரிக்கை மீதும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம்












Click it and Unblock the Notifications