சனாதனம், சட்டம் ஒழுங்கு.. அனல் பறக்குமா அக்டோபரில் கூடும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை பாஜக தீவிரமாக கையில் எடுத்துள்ள நிலையில் அதுகுறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அது போல் அமைச்சர்கள் பலர் பேசும் கருத்துகள் மீது எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வது உள்ளிட்ட பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் தற்போது அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

அதாவது கடந்த மார்ச் மாதம் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடரானது தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி முடிந்தது. இந்த கூட்டத் தொடரின் போது ஆளுநர் உரை, நிதி நிலை அறிக்கை, மானியக் கோரிக்கை மீதான விவாதம் என 26 நாட்கள் நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தொடர் நடந்து முடிந்த 6 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு கூட்டத் தொடரை கூட்ட வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் 3 , 4 ஆகிய தேதிகளில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு முடிந்தவுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறித்தும் டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சர் பதவியில் உள்ளது குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத் தொடருக்கு முன்பு அமைச்சரவையும் கூடவுள்ளது. சட்டம் ஒழுங்கு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சட்டசபையில் அதிமுக எழுப்ப திட்டமிட்டுள்ளது. அது போல் சனாதன சர்ச்சை குறித்து பாஜக எழுப்ப திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறித்த கோரிக்கை மீதும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications