ரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு!
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் ஓ . பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் ஓ . பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நாடு முழுக்க ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது. இந்தியாவின் சிறப்பான ரேஷன் முறையை சிக்கலாக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.
உலக வர்த்தக நிறுவனம், இந்தியாவில் வழங்கப்படும் பொது விநியோக திட்டத்தை பல வருடங்களாக கண்டித்து வருகிறது. பொது விநியோக திட்டத்தை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.

எப்படி இது
இதற்கு மத்திய அரசும் இசைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். உணவு பாதுகாப்பு மசோதா கூட இதன் அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம்தான் இப்போது ரேஷன் வழங்கும் முறையும் மாற்றப்பட உள்ளது. ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையையே மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது. நாடு முழுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தலையீடு
இதற்கு தமிழக அரசும் தலையாட்ட தொடங்கி விட்டது. 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதை நடைமுறை படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறுவதற்கு முன்பே தமிழக மாநில அரசு தேர்வு தேதிகளை அறிவித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. அதன்பின், இந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

எப்படி இனி மேல்
தற்போது அதே போல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முன் தமிழக மாநில அரசு உடனடியாக அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் நபர்களும் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்க முடியும். உத்தர பிரதேசத்தில் கோதுமை கிடைக்கவில்லை என்றால், அவர் தமிழகத்தில் வந்து அரிசி வாங்க முடியும்.

மக்கள் கோபம்
இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டில் அறிவித்தார். இந்த வேளாண் தொடர்பான நிறைய அறிவிப்புகள் வெளியானது. வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்காக 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மோசம்
1364 நீர் பாசன பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, தமிழக அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தையும் கொண்டு வருவோம் என்றுள்ளது. தமிழக அரசு பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கும் வகையில் இதை அறிவித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் தமிழகத்தில் பாதிக்கப்படுவார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications