வெள்ளை அறிக்கையின் தாக்கம்.. சொத்து வரி, மின் கட்டணங்கள் உயருமா?.. மக்கள் கவலை
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் நிதிநிலையை திமுக அரசு வெளியிட்ட நிலையில் இன்றைய பட்ஜெட்டில் சொத்து வரி, மின் கட்டணங்கள், பஸ் கட்டணங்கள் போன்றவை உயருமா என்ற கவலை மக்கள் மனதில் எழுந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பால், பேருந்து, மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதையடுத்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும் முக்கிய வாக்குறுதிகளான இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 நிதியுதவி, சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ 100 மானியம், கல்விக் கடன், நகைக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் நிறைவேற்றவில்லை என அதிமுக குற்றம்சாட்டியது.

5.78 லட்சம் கோடி
இதையடுத்து தமிழக பட்ஜெட்டுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கான தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்தார். அதில் தமிழகத்தின் மீது 5.78 லட்சம் கோடி கடனில் தத்தளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

குடும்பத்தின் மீது 2.63 லட்சம் கடன்
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடனிருப்பதாகவும் தனது வெள்ளை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இதையடுத்து வெள்ளை அறிக்கையை காரணம் காட்சி பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீது கடன் சுமையை ஏற்றக் கூடாது என்றும் எதனுடைய விலையும் ஏற்றக் கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.

போக்குவரத்து துறை
பிடிஆர் தனது வெள்ளை அறிக்கையில் எல்லா துறைகளை விட போக்குவரத்து துறையும் மின்சார துறையும்தான் கடனில் தத்தளிக்கிறது என தெரிவித்திருந்தார். இதனால் இன்றைய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் மின் கட்டணங்களும் பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்படுமா என மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுமா
பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது என நேற்றைய தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். எனினும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொது போக்குவரத்தின் கட்டணங்கள் ஏறுமோ என்ற கவலை தொற்றிக் கொண்டுள்ளது. அது போல் மின்சார கட்டணத்தை மாதந்தோறும் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது அதன் கட்டணமும் உயருமா என கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சரவை தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்
தமிழக முதல்வராக தனது தலைமையிலான அமைச்சரவை தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் பொதுமக்கள் மீது எந்த சுமையையும் ஸ்டாலின் ஏற்றமாட்டார் என பலர் கருதுகிறார்கள். மேலும் பிடிஆர் தனது வெள்ளை அறிக்கை வெளியிட்ட போது தமிழகத்தில் சிஸ்டமே சரியில்லை என்றார். அதாவது போட் கிளப் ஹவுஸில் வீடு உள்ள ஒருவரும் சாதாரண இடத்தில் உள்ள ஒருவரும் ஒரே சொத்து வரியை செலுத்துகிறார்கள். அது போல் அங்கிருக்கும் நபர் செலுத்தும் குழாய் வரியும் சாதாரண குடிசை வீட்டில் இருக்கும் நபர் செலுத்தும் குழாய் வரியும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே இது மாற்றப்பட வேண்டும் என்றார். எனவே கடனை மொத்தமாக ஏழை, நடுத்தர மக்கள் மீது சுமத்தாமல் சொத்து வரி, குழாய் வரி உள்ளிட்டவற்றில் திருத்தம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Recommended Video

பொருளாதார ஆலோசனை குழு
மேலும் பொருளாதார ஆலோசனை குழுவில் உள்ள ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் உள்ளிட்டோர் வறுமையை ஒழிக்கும் கொள்கைகளை கொண்டவர்கள். எனவே இந்த பட்ஜெட்டில் இவர்களுடைய தலையீடுகள் நிச்சயம் இருந்திருக்கும். இதனால் பொதுமக்கள் மீது சுமையை இவர்கள் ஏற்ற ஆலோசனைகளை வழங்கியிருக்க மாட்டார்கள் என ஒரு சாரார் கூறுகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications