சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 149.. 4 மாவட்டங்களில் கொரோனா இல்லை
சென்னை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தலைநகரில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பீலா ராஜேஷ்
மேலும், சென்னை திருவிக நகரை சேர்ந்த 64 வயது பெண்மணி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், எனவே பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இவரது பேட்டியை தொடர்ந்து எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியிடப்பட்டது.

ஒரே நாளில் 39
அதன்படி சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டு அங்கு 149 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதலிடத்தில் சென்னை நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்திற்கு இரண்டாவது இடம். அங்கு 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல், நெல்லை
திண்டுக்கல் மாவட்டத்தில் 45, நெல்லை மாவட்டத்தில் 38, ஈரோடு மாவட்டத்தில் 32, திருச்சி மாவட்டத்தில் 23, நாமக்கல் மாவட்டத்தில் 28, ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு மற்றும் மதுரை 24, கரூர் மற்றும் தேனி 23, தூத்துக்குடி மாவட்டத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்கள்
விழுப்புரம், திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் தலா 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 13 பேர். நாகை, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் தலா 11 பேர், சேலம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, விருதுநகர் மாவட்டங்களில் தலா 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 மாவட்டங்களில் கொரோனா இல்லை
கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 6 பேர், சிவகங்கை, வேலூரில் தலா 5 பேர், நீலகிரி 4, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2, அரியலூர், பெரம்பலூரில் தலா ஒருவர் பதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு கிடையாது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications