சென்னையைவிட பிற மாவட்டங்களில் 4 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகம்
சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு 3,49,654 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 1,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,527பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதாவது, சென்னையைவிட பிற மாவட்டங்களில், 4 மடங்கு அளவுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
மாவட்ட நிலவரம் இதோ: சென்னை-1,182, திருவள்ளூர்-489, கோவை-392, செங்கல்பட்டு-344, தேனி-295, சேலம்-286, கடலூர்-250, காஞ்சிபுரம்-249, திண்டுக்கல்-150, கன்னியாகுமரி-147, ராணிப்பேட்டை-129, தஞ்சை-129, திருவண்ணாமலை-123, நெல்லை-119, திருச்சி-119, விழுப்புரம்-114, புதுக்கோட்டை-110 இவ்வாறு பதிவாகியுள்ளது.
அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை
வேலூர்-94, தென்காசி-93, மதுரை-77, நாகை-75, கள்ளக்குறிச்சி-75, அரியலூர் -73, திருப்பத்தூர்-73, தூத்துக்குடி-68, ஈரோடு-58, விருதுநகர்-54, சிவகங்கை-51,
கரூர்-49, ராமநாதபுரம்- 48, திருப்பூர்-45, திருவாரூர்- 41, பெரம்பலூர்-34, நாமக்கல்-37, கிருஷ்ணகிரி-19, நீலகிரி -9, தர்மபுரி-8 இவ்வாறு பதிவாகியுள்ளது.