மின் இணைப்பு பெற காலதாமதமா? இனி கவலையவிடுங்க! தமிழக மின்சாரத் துறையில் 3 முக்கிய அறிவிப்புகள்
சென்னை: தமிழகத்தில் மின்சாரத் துறையில் 3 முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இனி காலதாமதம் என்றால் அதற்கு மின் துறை பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
மின்சாரம் கண்டுபிடித்திருந்தாலும் அது இல்லாமலேயே காலம் தள்ளிய காலம் போய் இன்று மின்சாரம் என்பது அவசியமானதாகிவிட்டது. ஆனால் மின் இணைப்பை பெறுவது என்பது சில நேரங்களில் கடினமாகிவிட்டது. புதிய மின் இணைப்புக்கு பட்டா, வில்லங்கம் பார்த்தல் என சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன.
இந்த விதிகள் சரியாக இருந்தால் புதிய மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சில இடங்களில் காலதாமதமாகி வருகிறது. இதனால் ஆண்டுக்கணக்காக மின் இணைப்பு கிடைக்காமல் இருளிலேயே பொழுதை கழிப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

மாதத்திற்கு இத்தனை மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் பலர் மின்சார வாரியத்திற்கு நடையாய் நடந்து வருகிறார்கள். அது போல் நாம் நிறைய நாளிதழ்களில் படித்திருப்போம். வீட்டில் பேன், லைட்டை தவிர வேறு அதிக வாட்ஸ் கொண்ட எந்த வித மின்சார சாதஙனங்களும் இல்லாத வீடுகளில் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் மின் கட்டணம் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
பின்னர் சம்பந்தப்பட்ட நபர் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு பழைய ரசீதுகளில் தான் பயன்படுத்திய யூனிட்கள் அதற்கு அவர் செலுத்திய கட்டணத்தை காட்டியவுடன் அவரது பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இந்த நிலையில் மக்களின் இன்னலை போக்க தமிழ்நாடு மின்சார துறையில் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மின் இணைப்பு காலதாமதத்திற்கு ஒரு விடிவு பிறக்கும் என தெரிகிறது.

மின்சார வாரியம் கொண்டு வந்த அந்த 3 முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம்.
- மின் இணைப்புக்காக புதிதாக விண்ணப்பித்தால் 7 நாட்களுக்குள் இணைப்பை கொடுக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றால் ரூ 100 முதல் ரூ 1000 வரை இழப்பீடாக மின்சார வாரியம் கொடுக்க வேண்டும்.
- உங்களுக்கு மின் பயன்பாடு குறைந்து மின் கட்டணம் அதிகமாக வந்திருந்தால், அது குறித்து குறைபாட்டு மனுவை மின்சார வாரியத்தில் சமர்ப்பிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதன் மீது மின்சார துறை 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் அதற்கான காலதாமதத்திற்கு மின்சார துறைதான் பொறுப்பு. அது போல் உங்களுக்கு இழப்பீடு தரக் கூடிய விதியும் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
- சில இடங்களில் மின் இணைப்புக்காக விண்ணப்பித்தாலும் காலதாமதம் ஆகும். ஏனென்றால் அந்த பகுதிகளில் புதிதாக கம்பம் நடும் பணிகளை செய்ய வேண்டும். டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும். இந்த மாதிரியான இடங்களுக்கு 90 நாட்களுக்குள் கம்பம் நடுதல், டிரான்ஸ்பார்மர் வைத்தல் பணிகளை செய்து முடித்திருக்க வேண்டும்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications