தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல்.. நாளை வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஜூன் 26ம் தேதி) வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 440-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
கடந்த ஆண்டில் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அந்தவகையில் தற்போதையை புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டைவிட அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக கடந்த 20-ந்தேதி நிறைவு பெற்றது. சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்து, தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி தரவரிசை பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
இதனிடையே கணிதத்தில் 690 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உருவாகி உள்ளது. அதேநேரம் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டு 1,500 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 3,909 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோன்று இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 634 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 813 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணித பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு குறைந்துள்ள நிலையில் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. இதனால் என்ஜினீயரிங் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது..எனவே நாளை தரவரிசை பட்டியல் வெளியிடும் போது என்ன என்பது தெரியவரும்.
என்ஜினியரிங் வகுப்பு எப்போது தொடங்கும்? முதலாம் ஆண்டு வகுப்புகளில் உள்ள காலியிடங்களில் மாணவர் சேர்க்கை என்பது செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நிரப்பப்பட வேண்டும். அவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படும். அதேபோல், நேரடியாக 2-ம் ஆண்டில் சேரும் மாணவர்களும் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் சேர வேண்டும்
முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். தொலைதூர, திறந்த நிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளை கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications