மக்களே! இனி அடிச்சு புடிச்சு ஓட வேண்டாம்.. காய்கறி கடை, மளிகை கடைகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு
சென்னை: காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரு தினங்களாக மருத்துவக் குழுவினர் மற்றும் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
அப்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வெளியான அறிக்கையில் பேருந்து சேவைக்கான தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும்.

மத்திய அரசு
உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க மத்திய அரசு அனுமதியளித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் அதற்கு அனுமதி இல்லை. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் இனி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே மாலை 5 மணியுடன் கடைகள் மூடப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனீர் கடைகள்
உணவகங்கள், தேனீர் கடைகளில் இரவு 7 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பார்சலுக்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள்
பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் திறக்க தடை நீடிக்கிறது. ஆன்லைன் கல்வி முறை மூலம் பாடம் நடத்தலாம். காய்கறி, மளிகை கடைகள் தவிர ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட கடைகளை தற்போது காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூட்டம்
அது போல் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதாவது சமூக இடைவெளியுடன், நிறைய பேரை கூட்டம் சேர்க்காமல் விழாவை நடத்த வேண்டும் என மத்திய அரசு தனது வழிகாட்டு நெறிமுறைகளில் வெளியிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications