காரில் ஏசி கூடாது.. 1+2-வுக்கு மேல் நாட் அலவ்டு.. ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கான நெறிமுறைகள் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அது போல் வழிகாட்டும் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளை கொரோனா பரவல் காலகட்டத்தில் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்தளிக்கப்பட்டுள்ளன.
அவற்றை பின்பற்றி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் நடத்தப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்கக் கூடாது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி விடுவது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.

நோய் வாய்ப்பட்டவர்கள்
65 வயதை கடந்தவர்கள், வேறு நோய் வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் ஓட்டுனர் பயிற்சி பெற செல்ல வேண்டாம். அனைத்து பயிற்சி பள்ளிகளிலும் சானிடைசர், உடல் வெப்ப சோதனை கருவி வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் தினமும் உடல் வெப்பம் சோதிக்கப்பட வேண்டும்.

ஆதார் எண்
அவர்களின் செல்போன் எண், ஆதார் எண் ஆகியவை தனிப்பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும். அந்த பதிவேடு அரசின் ஆய்வுப் பணி அலுவலர்களிடம் காட்டப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிவுரையை பதாகைகளில் தொங்கவிட வேண்டும்.

வகுப்பறைகள்
கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வகுப்பறைகளில் நீண்டநேரம் பாடம் நடத்த வேண்டாம். பாடங்களை வாசித்து தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும். முடிந்தவரை பாடங்களை ஆன்லைனில் நடத்தலாம். வகுப்பறைகளில் சமூக இடைவெளி விடும் அளவில் ஆட்களை அனுமதிக்க வேண்டும். கைகள் அதிகம் படக்கூடிய பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

ஆரோக்கிய சேது செயலி
பயிற்சி பெற வருகிறவர்கள், பயிற்சியாளர் அனைவரும் ஆரோக்கிய சேது செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் ஊழியர்கள் யாரும் பயிற்சிப் பள்ளிக்கு வர வேண்டாம். பணப்பரிமாற்றம் இல்லாத வகையில் கட்டணங்களை வசூலிக்க வேண்டும்.

மருத்துவ பரிசோதனை
65 வயது கடந்த பணியாளர்கள், கர்ப்பிணி பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டிருக்கும் பணியாளர்கள் பணிக்கு வராமல் இருப்பது நல்லது. ஒருவேளை வந்தால், யாரிடமும் நேரடி தொடர்பில் இருக்கக்கூடாது. யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

வழிகாட்டும் நெறிமுறைகள்
கார் ஓட்டும் பயிற்சியின்போது ஏ.சி. போடக்கூடாது. ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். பயிற்சியாளர் மற்றும் 2 பேர் மட்டுமே ஒரு நேரத்தில் காரில் இருக்க வேண்டும். கையுறைகளை அனைவரும் அணிய வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications