Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ் கொலை வழக்கு... பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.. முதல்வர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Tamilnadu govt extents parole for one month for Rajiv Gandhi convict Perarivalan

அந்த கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே 28ஆம் தேதி, அவர் புழல் சிறையில் இருந்து திருப்பத்தூரில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட ஒரு மாதம் பரோல் நிறைவடைய இருந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து அளித்தால் தான் நன்மை என மருத்துவர்கள் கூறுவதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அவரது தயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுப் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+