தமிழகத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது.. 18ம் தேதி வாக்குப் பதிவு..!
Recommended Video
சென்னை: நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் இந்த தேர்தலை தமிழகம் சந்திக்கிறது.

கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!
இதனால் மக்களின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் , நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் கட்சி சார்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நாளை மறுநாள் நாடாளுமன்றம், 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இன்று மாலை 5 மணியுடன் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் ஓய்ந்தது.












Click it and Unblock the Notifications