தமிழகத்தில் தீவிரமடைகிறது லாக்டவுன்.. அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.. 5 முக்கிய தீர்மானங்கள்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் உள்ளது. கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த லாக்டவுனை அறிவித்தார்.
லாக்டவுன் அமலில் இருந்தாலும் மக்கள் பலர் வெளியே செல்வதும், லாக்டவுனை மதிக்காமல் சுற்றுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். முதல்வரின் இந்த அறிவுரையை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன.

ஆலோசனை
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும், கடுமையாக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆலோசனை வழங்கின. இதையடுத்து ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5 தீர்மானம்
மொத்தமாக 5 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1 - தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கும்.
தீர்மானம் 2 - அனைத்து விதமான கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்தப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டங்கள் நிறுத்தப்படும்.

உத்தரவு
தீர்மானம் 3 - மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கள அளவில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து செயல்படும்
தீர்மானம் 4 - சட்டசமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்க முடிவு
தீர்மானம் 5 - ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications