தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஒரு பக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து உள்ளது. இன்று புதுச்சேரி அருகே காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளது.

சென்னை வெள்ளம்
கனமழை காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் 100 மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. ஆவடி, அடையாறு, தி நகர் போன்ற பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

ரெட் அலர்ட்
மழை இன்னும் விடாத நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு, கடலுார், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கோவை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் விடுமுறை
கன்னியாகுமரியில் இரவு முழுக்க விட்டு விட்டு மழை பெய்தது. இதையடுத்து அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழையை பொறுத்து கூடுதலாக இன்னும் பல மாவட்டங்களில் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications