இங்கும் அங்கும் போக்கு காட்டிய தாழ்வு மண்டலம்.. இப்போது எங்கு இருக்கிறது? எப்போது கரையை கடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Tamil Nadu Weather Report | 11-11-2021 | Oneindia Tamil

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வலிமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது நேரம் செல்ல செல்ல வலிமை பெற்றது.

    நேற்று அதிகாலை இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. இதையடுத்து நேற்று பின்னிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    புயல்

    புயல்

    இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்புகள் இல்லை. அதற்கான போதிய அவகாசம் இல்லை. இதனால் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவே இது கரையை கடக்க உள்ளது. முதலில் காரைக்கால் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் காற்றழுத்த தாழ்வு மண்டலம் லேசாக திசை மாறியது.

    திசை மாறியது

    திசை மாறியது

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வலுப்பெற லேசாக திசை மாறி வந்தது. இதன் காரணமாக மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரை கடக்கும் வகையில் திசைமாறியது. ஆனால் அதன்பின்பும் மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறியது. இங்கும் அங்கு போக்கு காட்டிய தாழ்வு மண்டலம் தற்போது காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி

    புதுச்சேரி

    புதுச்சேரிக்கு மிக அருகில் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 170 கிமீ தொலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கிறது. அதேபோல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 170 கிமீ தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைபெற்றுள்ளது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்.

    வட தமிழ்நாடு

    வட தமிழ்நாடு

    அதுவரை கனமழை தீவிரமாக பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது 60 கிமீ வேகம் வரை காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. வட தமிழ்நாட்டை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி உள்ளது. இன்று மாலை தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் 3 மணி நேரங்களுக்கு முன் மழை தீவிரம் எடுக்கும். அதன்பின் கரையை கடந்த பின் சில மணி நேரங்கள் மிக கனமழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

    கனமழை

    கனமழை

    சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வில்லிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+