புதுவை-கடலூர் பெல்ட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் மழை இருக்கு! சென்னையில் மழை இருக்குமா? வெதர்மேன் தகவல்
சென்னை: திருச்சி, கரூர், நாமக்கல் பகுதிகளில் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னைக்கு முதல் மழையே அட்டகாசமாக அமைந்துவிட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கிவிட்டது.
கத்திவாக்கத்தில் அதிகபட்சமாக மழை பதிவாகியிருந்தது. இதையடுத்து பெரம்பூரில் இரண்டாவது அதிகபட்ச மழை பெய்திருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழை பெய்தது.

பகல் நேரம்
அதிலும் பகல் நேரத்திலும் மாலை நேரத்திலும் இந்த மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றைய தினம் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இன்றைய தினம் புதுவையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மிக கனமழை
மிக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் நாளை மறுநாளும் புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தினம் சில இடங்களில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்யும் என வெதர்மேன் கூறியிருந்தார். அதன்படி மாலை 5 மணி அளவில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தீவிர மழை 45 நிமிடங்களுக்கு பெய்தது.

தமிழ்நாடு வெதர்மேன்
மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உள் மாவட்டங்களான ஈரோடு, சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் நேற்று போல் இன்றும் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று இரவும் நாளையும் உள் மாவட்டங்களில் பிற மாவட்டங்களான திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

கடலூர், புதுவை
கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும். சீர்காழியில் 220 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அது போல் மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வேண்டும். தென் மாவட்டங்களான மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
-
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை.. 12 மாவட்டங்களில் இன்று பிச்சு உதறப் போகுது கனமழை.. வானிலை அலர்ட் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications