TASMAC: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கில் பணி புரிந்து வரும் 24 ஆயிரம் ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 01.04.2026 முதல் அமுலுக்கு வரும்.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (TASMAC) பணிபுரியும் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் நிர்வாகத்திற்கு வைத்ததின் பேரில் அவர்களுடைய கோரிக்கைகளை பரீசிலனை செய்து கீழ்க்கண்டவாறு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.
1. கடைப்பணியாளர்கள் ஏற்கனவே பெறும் ஊதியத்தோடு தற்போது கூடுதலாக ரூ.1000/- உயர்த்தி வழங்கப்படுகிறது. இது ஏப்ரல் 01.04.2026 முதல் அமுலுக்கு வரும். இதன் மூலம் 24,033 கடைப்பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை
2. கடைப்பணியாளர்களுக்கு ESI மருத்துவ மற்றும் சமூகப்பாதுகாப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3. காலிபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அவுட்சோர்சிங் (Out Sourcing முறையிலோ அல்லது காலிபாட்டில்களை சேகரிப்பு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவோ செயல்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டும் பணி வழங்க நடவடிக்கை
4. கிடங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் கடைப்பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
5. தற்காலிக பணிநீக்கம் கடைப்பணியாளர்களுக்கு உள்ள செய்யப்பட்டு வெளியில் குற்றச்சாட்டுகள் தன்மைக்கேற்ப மீண்டும் பணிவழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக மேலாண்மை இயக்குநர் (டாஸ்மாக்), பொது மேலாளர் (சில்லறை விநியோகம்), பொது மேலாளர் (நிர்வாகம்), துணைப் பொது மேலாளர் மற்றும் சட்டஅலுவலர் (டாஸ்மாக்) ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை துறைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications