டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஜாக்பாட்.. 20% போனஸ் + கருணை தொகை அறிவித்த தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவன சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்றும் ‛சி' மற்றும் ‛டி' பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் சில நாட்களே உள்ளதால் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடை, பட்டாசு வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழக அரசு சார்பில் துறை வாரியாக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்ட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2024-2025ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்றும் 24,816 பேருக்கு ரூ.40.62 கோடி போனஸாக வழங்கப்பட உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications