குடிகாரர்களுக்கு நேரம் குறிச்சாச்சு.. .. 7 நாளுக்கு 7 கலர்களில் டோக்கன்.. டாஸ்மாக் நிறுவனம் அதிரடி!
மதுபானம் வாங்க 7 நாட்களில் 7 வண்ண டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை: 7 நாளுக்கு 7 கலராம்.. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என மொத்தம் 7 கலர்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பலவித எதிர்ப்புகள், கண்டனங்களை மீறி நீதிமன்றம் சென்று மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி பெற்று வந்துள்ளது.. இதனால் நாளை கடைகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் டாஸ்மாக் திறக்கப்பட்டபோது சில விதிமுறைகளும் வரையறுக்கப்பட்டிருந்தன.

வயது, ஆதார் கார்டு இவைகளை செக் செய்து பார்த்தபிறகுதான் சரக்கு தரப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதேபோல, டோக்கன் சிஸ்டமும் கொண்டுவரப்பட்டது.. சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த டோக்கன் முறையை அமல்படுத்தினர்.. அதனால்தான் அரசு பள்ளி வளாகம் உட்பட இந்த டோக்கன்கள் வழங்கப்பட்டன.
தற்போது நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன.. சென்னை தவிர தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.. ஆனால் எவ்வளவு அறிவுறுத்தினாலும் குடிமகன்கள் நிதானத்தில் இருப்பதில்லை.. கடைகளை திறப்பதற்கு முன்பேயே காத்திருந்து சரக்கு வாங்கும் அக்கறை, சமூக விலகலை கடைப்பிடிப்பதில் காட்டுவதில்லை.. இதன் காரணமாகவே, கடைகளில் மதுபானம் வாங்க 7 கலர்களில் டோக்கன் விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 கலர்களில் அந்த டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டும்தான் மதுபானம் வாங்க டாஸ்மாக் வர முடியும்.. இந்த டோக்கனை பெறவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அலாரம் வைத்து தூங்கி எழுந்து கண்ணை கசக்கிவிட்டு வந்து நின்றாலும் பலன் இல்லை.. இந்த கலர் கலர் டோக்கன் வினியோகத்தினால் தேவையில்லாமல் கூடும் கூட்டம் தவிர்க்கப்படும்... சமூக விலகல் ஓரளவு கடைப்பிடிக்கப்படும் என நம்பப்படுகிறது. இவர்கள் தடபுடலாக தயாராகி வருகிறார்கள்.. பாவம் பெண்கள்தான்.. என்ன பாடுபட போகிறார்களோ!!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications