"தேரே மேரே பீச் மெய்ன்"... உங்கள் அலைகளுக்கு ஓய்வே இல்லை பாலு!
கடல் அலைகளுக்கு ஓய்வுண்டா.. அது போலதான் எஸ்பிபி என்ற பெருங்கடலுக்கும்.. நமது மனக் கரையை அது தொட்டு தொட்டு தாலாட்டிக் கொண்டேதான் இருக்கும்.
1981ம் ஆண்டு.. அப்பெல்லாம் இளையராஜா பைத்தியம் பிடிக்காத ஒருவரை தமிழகத்தில் காணவே முடியாது.. அப்படி ஒரு இசைப் பைத்தியம் பிடித்தாட்டிக் கொண்டிருந்த கால கட்டம்.. அந்த சமயத்தில்தான் அந்த காந்தத்தையும் தாண்டி இன்னொரு காந்தமாக வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார் எஸ்பிபி.
உண்மையில் இளையராஜாவுக்கு நிகரான அல்லது அவரை விட ஆளுமையான ஒரு போட்டியாளர் என்றால் அது எஸ்பிபி மட்டும்தான். இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடும்போது அந்த பாடல் வேறு லெவலில் இருக்கும். இருவருமே அப்படி போட்டி போட்டு பின்னி எடுப்பார்கள். அவருக்கு நிகர் இவரே.. இவருக்கு சரி அவரே.. இதைத் தாண்டி யாராலும் எதையுமே வெல்ல முடியாத நிலை.

ஏக் துஜே கேலியே
அப்படிப்பட்ட காலகட்டத்தில் 1981ல் இந்தியாவையே புரட்டிப் போட்டது ஒரு பாட்டு.. அதுதான் ஏக் துஜே கேலியேவில் இடம் பெற்ற "தேரே மேரே".. இந்தப் பாடலுக்கு கலங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. மொழியே புரியாமல் பல ஆயிரம் முறை ரசித்த ஒரு பாடல் என்றால் இதற்குத்தான் முதலிடம் கொடுக்கலாம். அப்படி மயக்கிப் போட்ட பாட்டு இது. எஸ்பிபி என்ற மகா கலைஞனுக்காகவே இதைக் கேட்டு ரசித்தவர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள்.

மாயக்குரலோன்
இதன் இசையை தாண்டி எஸ்பிபியின் அந்தக் குரல்தான் அந்தக் காலத்து இளைஞர்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. அந்தப் படம் அப்போது ஏற்படுத்திய பிரளயத்தை விட எஸ்பிபியின் பாடல்கள்தான் மிகப் பெரும் இதய ஊடுருவலை உண்டு பண்ணியது என்று சொல்ல வேண்டும்.. தேரே மேரே பாடலின் சோக வெர்ஷன் இன்னும் அதி தீவிரமானது.. அப்படியே அழ வைத்து விடும்.. மிகப் பெரிய வசியக்காரன்தான் இந்த பாலு.

தனி வசீகரம்
ஒரு நடிகன் முக பாவனையில் கொண்டு வருவதை தங்களது குரலில் அப்படியே பிரதிபலிக்கும் பாடகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. பாலுவுக்கு அதில் தனி இடம் உண்டு.. அதிலும் கமல்ஹாசனின் காதல் பாடல்களில் அப்படி ஒரு தனிச் சுவையை கொடுப்பார் பாலு.. அதை அவர் மட்டுமே கடைசி வரை மிகச் சிறப்பாக செய்தவர். கமல்ஹாசனின் தெலுங்குக் குரலாக அவர் திகழ்ந்தார் என்றால்.. அதற்கு இந்த இருவருக்கும் இடையிலான அந்த ஆத்மார்த்தமான புரிதல்தான் மிக மிக முக்கியம்.

கமலை மிஞ்சிய குரல்
தேரே மேரே பாடலில் கமல்ஹாசனின் நடிப்பை மிஞ்சியது பாலுவின் குரல்தான்.. அதில் சந்தேகமே இல்லை. அப்போது சிட்டி முதல் பட்டி வரை மிக மிக பிரபலம் இந்தப் பாடல். தமிழ் பாடல்களுக்கு கடும் போட்டி கொடுத்து டாப்பில் எகிறிக் கொண்டிருந்த நேரம். கமல்ஹாசன் படம், கேபி படம் என்பதையெல்லாம் தாண்டி அவர்களுக்கு நிகராக எஸ்பிபி மக்களை வசீகரித்துக் கொண்டிருந்தார் இந்தப் பாடல் மூலம்..
மனதைப் பிசைகிறதே
எஸ்பிபி என்ற மாயக் கலைஞனின் மகோன்னதமான இந்தக் குரல் மிக மிக அரியது. எல்லோருக்கும் வாய்த்து விடாது.. அப்படிப்பட்ட குரலை மிக மிக சரியாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஒவ்வொரு இசையமைப்பாளரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.. எஸ்பிபி மறைந்து போய் விட்ட இந்த நேரத்தில் இந்தப் பாடல் வந்து மனசை அப்படிப் போட்டுப் பிசைகிறது.
"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ... இது என்ன வினோதமான பந்தம்?"
அந்தப் பாடல் வரிகளைப் போலத்தான் மாறிப் போயிருக்கிறது பாலுவுக்கும், நமக்குமான பந்தம்.. நிச்சயம் நமக்கு இது பேரிழப்பு.. சந்தேகமே இல்லை.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications