பொங்கல் ரயில் டிக்கெட் ரிசர்வேசன்.. சட்டுன்னு முடிஞ்சிருச்சே.. ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுமா?
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக ரயில்களில் டிக்கெட்டுகள் ரிசர்வேசன் தொடங்கிய 5வது நிமிடத்தில் முடிவடைந்ததால் வரிசையில் காத்திருந்த தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் டிக்கெட் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாகும்.
பண்டிகை வந்தாலே அதை குடும்பத்தோடும் உறவினர்களோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். நவராத்திரி, தீபாவளி, பொங்கல் பண்டிகை என வரிசையாக பண்டிகைகள் வர உள்ளன. தொடர் விடுமுறையும் வர உள்ளதால் படிக்கவும், வேலை செய்யவும் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

சென்னை, கோவை, திருப்பூர், உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தென்னக ரயில்வேயும் ரயில் முன்பதிவு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது.
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல், 16ல் மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தமிழர் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதன்படி நேற்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11ம்தேதி ரயிலில் பயணம் செய்யலாம். இன்று முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்யலாம். அதாவது ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்துள்ளது.
அதன்படி, ஜனவரி 12ம் தேதி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஐந்தே நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு முடிந்தது. குறிப்பாக பொதிகை, பாண்டியன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது.
காலை 8 மணி முதலே ஏராளமானோர் முன்பதிவு செய்ததால் அனைத்து டிக்கெட்டுகளின் ரிசர்வேஷன் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. பலர் அதிகாலை 5 மணியில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்து முன்பதிவு செய்தனர். ஆனால் இணையதளத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்ததால் டிக்கெட் கவுன்ட்டர்களில் காத்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்வோர் ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு செய்வோர் தைத் திருநாளான ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 2000 முதல் 3000 வரை விற்பனையாகும் எனவேதான் பலரும் ரயில்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பவும் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வரவும் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் ரிசர்வேசன் செய்கின்றனர். போகிக்கு முதல்நாள் வரை டிக்கெட் ரிசர்வேசன் முடிந்து விட்டது. நாளைய தினம் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல, ரயில் டிக்கெட் முன் பதிவு கடந்த ஜூலை மாதம் துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications