ஆஹா.. சூப்பர்! இதைத்தானே எதிர்பார்த்தோம்! 500 மதுக்கடைகள் மூடல்! கொண்டாடும் தமிமுன் அன்சாரி!
சென்னை: நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்பை கொண்டாடி வரவேற்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
கடந்த வாரம் திமுக அரசுக்கு எதிராக மிக சூடாக பேசிய தமிமுன் அன்சாரி, இன்று முதல்வரை பாராட்டி வாழ்த்தி அவர் முன்னெடுத்த நடவடிக்கையை கொண்டாடுகிறார்.

இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு பூரண மதுவிலக்கையும் அமல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிமுன் அன்சாரி விடுத்துள்ள பதிவு வருமாறு;
''நாளை முதல் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆரோக்யமான சமூகத்தை கட்டமைக்க பூரண மதுவிலக்கு அவசியம் என்பது எமது கொள்கையாகும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இன்றைய முதல்வரிடம் நாங்கள் கொடுத்த ஐந்தம்ச கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
கடைசியாக நடைபெற்ற சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது கூறியவாறு, அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பூரண மதுவிலக்கை நோக்கிய ஆரம்ப முயற்சி என்ற அளவில் இதனை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வரவேற்கிறோம். தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உடல் நல சீர்கேடு, சாலை விபத்துகள், குடும்ப சீரழிவுகள், தனிநபர் பொருளாதார வீழ்ச்சி என பலவற்றுக்கும் மூலக்காரணமாக மதுபான கடைகளே விளங்குகின்றன. எனவே அடுத்தடுத்து இது போன்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.''












Click it and Unblock the Notifications