பணமில்லை என்றாலும்... உதவ மனமிருக்கிறது... தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிவாரண பொருட்கள்
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய தொகுப்பு பைகளை த.வா.க. நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
மேலும், சாலைகளில் தங்கியிருக்கும் இரவல் பெறுவோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தினமும் ஒரு வேளை உணவு அளிக்கும் அறப்பணியையும் இவர்கள் தொடர்கின்றனர்.

ஏழை எளிய மக்கள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளர்களும், தினக்கூலி பெற்று குடும்பத்தை கவனித்துக்கொண்டவர்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும், நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் இந்த மனிதநேய பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

சொந்த நிதி
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் பலரும் பொருளாதார ரீதியாக பெரிய செல்வந்தர்கள் இல்லை என்றாலும் கூட, வேல்முருகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தங்களால் இயன்ற உதவிகளை அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஏழை எளியோருக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் செய்து வருகின்றனர். சொந்த நிதியில் கட்சியினர் நிவாரணப் பொருட்களை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் அவ்வப்போது தொலைபேசி வாயிலாக பேசி த.வா.க. தலைவர் வேல்முருகன் ஊக்குவிக்கிறார்.

உணவு பொட்டலம்
சென்னை, கோவை, கடலூர், திருச்சி, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் தங்கியிருக்கும் இரவல் பெறுவோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் உணவு பொட்டலங்களை விநியோகம் செய்கின்றனர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய கபசுரக் குடிநீரையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும், யாராவது மருத்துவ உதவிகள் கோரினால் அதனை வேல்முருகன் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு உரிய மருத்துவ ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர்.

மனமிருக்கிறது
நிவாரண பொருட்கள் வழங்குவது பற்றி நம்மிடம் பேசிய அக்கட்சியின் மாநில முக்கிய நிர்வாகி ஒருவர், தங்களிடம் பணமில்லை என்றாலும் உதவி செய்ய வேண்டும் என்ற மனமிருப்பதாகவும், நிர்வாகிகள் வசிக்கும் பகுதிகளில் அக்கம்பக்கத்தில் யாரும் பசியால் நோகிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வேல்முருகன் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த ஒரு மாதமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் தங்கியுள்ள வேல்முருகன், அங்கிருந்தவாறே கட்சியினர் மேற்கொள்ளும் நிவாரணப்பணிகளை தொலைபேசி மூலமும், வாட்ஸ் அப் குழு மூலமும் கேட்டறிந்து வருகிறார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications