தோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து "இங்கு" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்
Recommended Video
சென்னை: தோல்வியை அமமுக ஒப்புக் கொள்ள வேண்டும் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை தங்கதமிழ்ச் செல்வன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுகவுக்கு எதிராக புதிய சின்னத்தைக் கொண்டு வந்ததை தொண்டர்கள் ஏற்கவில்லை.

எம்எல்ஏ பதவி போன எனக்கே இந்த நிலைமை. என் எதிர்ப்பால்தான் அமமுக உருவாவது தாமதமானது. அதிமுகவிலிருந்து யாரும் அமமுகவுக்கு வரவில்லை.
தலைவர்கள் பேசுவதை வெளியில் சொன்னால் தினகரன் மீது எப்படி நம்பிக்கை வரும். தோல்வியை அமமுக ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அமைச்சர்களை தினகரன் ஒருமையில் பேசுகிறார். இது தவறு. மற்ற தலைவர்கள் பேசுவதை வெளியில் சொல்வது அநாகரீகம். நான் ஹோட்டலில் தங்குவதையெல்லாம் பிரச்சினையாக்குகிறார் தினகரன். நான் எந்த ஹோட்டலில் தங்கினால் அவருக்கென்ன என தங்கதமிழ்ச் செல்வன் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications