பிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்
சென்னை: அமைதிபூங்காவாக உள்ள இந்தியாவை வேறு திசையில் கொண்டு செல்ல பா.ஜ.க. முயற்சிக்கிறது சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு பேட்டியளித்தார்.
Recommended Video
இதுகுறித்து, இன்று, சென்னை விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பேட்டி:

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என்று பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் மக்களை அழைத்துப் பேசவும் மத்திய அரசு தயாராக இல்லை. டெல்லியில் பெரும் கலவரம் நடந்துக் கொண்டு இருக்கும் போது டிரம்ப் வந்ததால் கவனிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். உள்துறை அமைச்சர் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நாடு முழுவதும் போராட்டம் நடந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது.
என்.ஆர்.சி. பற்றி பேசவே இல்லை என்று பிரதமர் கூறுகின்றார். ஆனால் நாடு முழுவதும் என்.ஆர்.சி. கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார். பிரதமர்- உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் யார் பொய் பேசுகின்றனர் என்று தெரியவில்லை. மக்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க வில்லை.
ஜனநாயக நாட்டில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அரசியல்வாதி என்பது மக்களுக்கு சேவை செய்ய கூடியவர் என்று அர்த்தம். பின்னர் ஏன் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
நாடு முழுவதும் மத ரீதியாக மக்களை பயமுறுத்த தொடங்கி உள்ளனர். பா.ஜ.க. தலைவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக பேசி உள்ளனர். பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரமாக பேசிய பா.ஜ.க. தலைவர்களை ஏன் கைது செய்யவில்லை. டெல்லி போலீஸ் என்ன செய்துக் கொண்டு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளராக இருப்பதால் தட்டி கேட்க கூடாது என்ற நிலை நிலவுகிறது.
நாடு எந்த திசையில் போகிறது? எந்த திசையில் போக உள்ளது என்பதை பார்க்கும் போது பயமாக உள்ளது. நாடு அமைதி பூங்கா இருந்தது. தற்போது பிரச்சனைகள் தொடங்கி உள்ளதை பார்த்தால் நாளை எங்கே போய் முடியும் என்ற பயம் ஏற்படுகிறது.
மக்கள் மத்தியில் விஷத்தை விதைக்கின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். அமைதிபூங்காவாக உள்ள இந்தியாவை வேறு திசையில் ஏன் கொண்டு செல்ல நினைக்கிறீர்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி கேள்வி கேட்டு மக்கள் போராடுகின்றனர். பதில் சொல்ல தெரியததால் பதிலளிக்க மறுக்கின்றனர். இதை திசை திருப்ப பா.ஜ.க. முயற்சி செய்கிறது. பா.ஜ.க. நினைப்பது தான் மக்களிடம் ஊடகம் முலமாக செல்ல வேண்டும் என்று செயல்படுகிறது. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications