வெள்ளப் பாதிப்புகளை கையாண்ட விதம்! நேரில் ஆய்வு செய்த பிறகு தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு!
சென்னை: தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை கையாண்ட விதத்தையும், எடுத்த புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய குழு பாராட்டியுள்ளது.
2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சென்னையில் இப்போது மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய குழு கூறியுள்ளது. அதுமட்டுமல்ல, இவ்வளவு பெரிய புயல், மழை, வெள்ளத்திலும் உயிர்சேதம் ஏதும் அதிகமில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தேதிகளில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. யாரும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இருளில் உணவின்றி, பாலின்றி பெரியோர் முதல் கைக்குழந்தைகள் வரை தவித்துப் போய்விட்டனர்.
சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. கார் முதல் வீட்டின் அடித்தளத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டதால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து தங்கள் வாழ்நாள் உழைப்பின் மூலம் சேர்த்த பொருட்களை இழந்தனர். இந்நிலையில் இப்போது சென்னையில் பழையபடி இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தச் சூழலில் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு சென்னை அனுப்பி வைத்தது.
அந்தக் குழுவில் ஏ.கே.சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, ரங்கநாத் ஆதம், விஜயகுமார், திமன்சிங் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இதனிடையே சென்னை வந்த மத்திய குழுவிடம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பாதிப்பு விவரங்களை எடுத்துரைத்தார். மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மத்திய குழுவை சில இடங்களுக்கு நேரிலேயே அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய குழுவினர், தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை கையாண்ட விதத்தை பாராட்டியுள்ளது. அதேபோல் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications