வைகோவுக்கு எதிரான வழக்கு.. 4 மாதங்களில் விசாரணையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என, திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி 21 ம்தேதி திண்டுக்கல்லில மதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கூட்டத்தை நடத்தியதாக கூறி, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் ஆகியோருக்கு எதிராக திண்டுக்கல் நகர வடக்கு போலீசார் வழக்கப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், நீண்டகாலமாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கின் விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என, திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications