ஆட்சியாளர்களிடம் வீரத்தை காண்பிக்காமல் அப்பாவி முதியவரை அடித்தே கொன்ற வீராதி வீரர்கள்
Recommended Video

சென்னை: ஆட்சியாளர்களிடம் வீரத்தை காண்பிக்காமல் அப்பாவி முதியவர் ஒருவர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த போது அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார்.
இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

வாக்கு
அதுபோல் எம்ஜிஆர் மீதும் ஈடுபாடு கொண்டவர் என்பதால் இவர் பாஜகவும் அதிமுகவும் ஒரே அணியில் இருக்கும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார்.
லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

தாக்குதல்
அப்போது அங்கு வந்த கோபிநாத், அந்த முதியவரிடம் தகராறில் ஈடுபட்டார். மோடிக்கு ஆதரவாக ஏன் வாக்கு சேகரிக்கிறீர் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரம் தாளாமல் முதியவர் என்றும் பாராமல் கடுமையாக தாக்கினார்.

சகிப்புத்தன்மை
இதில் அந்த முதியவர் உயிரிழந்தார். பார்ப்பதற்கு அய்யோ பாவம் போல் காட்சி அளிக்கும் முதியவரை இரவு நேரத்தில் அடித்துக் கொன்ற கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். இதை பார்க்கும் போது சகிப்புதன்மை என்பது யாருக்கும் இல்லாமல் போய்விட்டதையே இது காட்டுகிறது.

பிரசாரம்
மாட்டுக் கறி வைத்திருந்த முதியவர் அடித்துக் கொலை, பிள்ளை பிடிக்க வந்ததாக கருதி மூதாட்டி அடித்துக் கொலை என பல்வேறு சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டது. வாக்களிப்பது எப்படி ஜனநாயக கடமையோ அது போல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்வதிலும தவறில்லை.

முதியவர் அடித்துக் கொலை
இன்று நாடு முழுக்க தேர்தல் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை தேர்தல் ஆணையமே அனுமதிக்கிறது. அவ்வாறிருக்கையில் பிரச்சாரம் செய்த முதியவரை அடித்துக் கொன்றது எந்த வகையில் நியாயம்?

எந்த கட்சி
மோடிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு முதியவர் பிரச்சாரம் செய்தது தவறு என்றால் அன்றாடம் வாக்கு கேட்டு வீதி வீதியாக வீடு வீடாக வரும் மோடி சார்ந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் செய்வது மட்டும் நியாயமா. ஆட்சியாளர்களிடம் வீரத்தை காட்டாமல் அப்பாவி பெரியவரிடம் வீரத்தை காட்டிய இந்த வீராதி வீரன் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications