பிஸ்கட், பாக்கெட் வாட்டர் கொடுங்க.. மனதார உதவுங்க.. அறந்தாங்கி நிஷா உருக்கமான வேண்டுகோள்
திருச்சி மாவட்ட மக்களுக்கு அறந்தாங்கி நிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: இருளிலும், பசியிலும் அவதிப்பட்டு வரும் திருச்சி மாவட்ட மக்களுக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வர வேண்டும் என்று விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புரட்டி போட்ட புயலினால் பல்வேறு மாவட்ட மக்கள் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அரசாங்கம் செய்கிறதோ இல்லையோ, நாமே களத்தில் இறங்கி எம் மக்களுக்கு கை கொடுக்கலாம் என்று தனியார் அமைப்புகள் முதல் தனி நபர் வரை கிளம்பி விட்டார்கள்.
அறந்தாங்கி நிஷா
ஆளுக்கு ஒரு பக்கம் சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அப்படித்தான் அறந்தாங்கி நிஷாவும் கிளம்பிவிட்டார்.
திருச்சி போகிறேன்
இவர் சென்னையிலிருந்து திருச்சிக்கு தனது காரில் சென்று கொண்டிருக்கும்போது வழியிலேயே ஒரு பிரத்யேக வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட மக்களுக்காகவே நிஷா இதனை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், "இன்று இரவு திருச்சிக்கு வந்துவிடுவேன்.
நல்ல உள்ளங்கள்
நாளை காலை அங்கிருந்து கிளம்பி விடுவேன். எனவே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு யாராவது உதவ எண்ணினால், தன்னை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு உதவும் திருச்சி மாவட்ட நுல்லுளங்கள், பிஸ்கட் பாக்கெட், தண்ணீர், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி போன்றவற்றை தன்னிடம் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
காசு, பணம் வேண்டாம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை துணிமணியோ, பணமோ இல்லை என்றும், சாப்பிடுவதற்கு உணவும், இருளில் அவஸ்தை பட்டு வரும் மக்களுக்கு மெழுகுவர்த்தியும், குழந்தைகளுடன் இரவெல்லாம் அவதிப்பட்டு வருபவர்களுக்கு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசுவர்த்தியும்தான் அத்தியாவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.