சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
சென்னை : சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு நாளை (மே 6ம் தேதி) முதல் மே 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Recommended Video

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் மற்றும் ரயில்களில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மத்திய, மாநில அரசுகளின் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள் (மருத்துவ பணியாளர்கள்), மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கு புறநகர் ரயில்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மே 1ம் தேதியில் இருந்தே புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் - அரக்கோணம், - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்பகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் பயணிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications