சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
சென்னை : சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு நாளை (மே 6ம் தேதி) முதல் மே 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Recommended Video

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் மற்றும் ரயில்களில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மத்திய, மாநில அரசுகளின் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள் (மருத்துவ பணியாளர்கள்), மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கு புறநகர் ரயில்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மே 1ம் தேதியில் இருந்தே புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் - அரக்கோணம், - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்பகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் பயணிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications