தமிழகத்தில் குளுகுளு வெப்பநிலை.. பின்னணியில் சோமாலியா.. புது கிளைமேட்டிற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது. முக்கியமாக அதிகாலையில் மிக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது.
இது தொடக்கத்தில் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது இந்த குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

அதிகமாக குறைந்தது
சென்னையில் கடந்த வாரம் வெப்பநிலை 11 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது. சென்னையில் சில இடங்களில் 9 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளிலும் வெப்பநிலை குறைந்தது. ஊட்டி, கொடைக்கானலில் 0 டிகிரி செல்ஸியஸை தொட்டதும் குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சிதான் இதற்கு காரணம் ஆகும். இது தற்போது இந்தியாவில் உள்ள குளிரான காற்றை இழுத்து வருகிறது. இதனால் வட இந்தியாவில் உள்ள காற்று தென்னிந்தியா வழியாக செல்கிறது. இந்த குளிரான காற்று தமிழகத்தை கடப்பதால் இங்கு வெப்பநிலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

தென் மாநிலங்கள்
இதனால் மற்ற தென்மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் இதனால் பெரிய அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது. 7 டிகிரி செல்ஸியஸ் வரை கேரளாவில் வெப்பநிலை குறைந்து இருக்கிறது. எப்போதும் குளிராக இருக்கும் பெங்களூரில் 6 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது.

எவ்வளவு நாள்
இன்னும் ஐந்து நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று கூறுகிறார்கள். இந்த காற்று முழுதாக கடக்கும் வரை வெப்பநிலை குறைந்து கொண்டே இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த குளிர் காற்று காரணமாக இந்த வருடம் மழை குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications