Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளச்சேரி ரயில் நிலையம் முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை அதிரடியாக மாறிய காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையம் கடந்து மேம்பாலம் இறங்கினால் பள்ளிக்கரணையில் கைவேலி சந்திப்பு வரும் இடம் முதுல் மேடவாக்கம் கூட்ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம்சாட்டி வந்தார்கள். குறிப்பாக கைவேலி சந்திப்பு முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை நடைபாதைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகள் காரணம் என்று புகார் எழுந்தது. அவற்றை தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை போலீசார் அகற்றி உள்ளனர்.

சென்னையில் அடையாறு தாண்டி, இந்திரா நகர் தொடங்கி, திருவான்மியூர் ஐடி பார்க், பெருங்குடி, துரைப்பாக்கம், கந்தன்சாவடி, ரேடியல் சாலை, சோழிங்கநல்லூர் மற்றும் நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்லூரிகள் அதிக அளவில் அமைந்துள்ளன.

The sudden change in scenery from Velachery Railway Station to Pallikaranai Kamakshi Hospital

ஐடி ஊழியர்கள் கிண்டி மற்றும் அண்ணா சாலை செல்ல வேண்டும் என்றால், பள்ளிக்கரணை, மேடவாக்கம் சாலையில் தான் வேளச்சேரியை தாண்டி செல்ல வேண்டும். அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதி மக்கள் ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வழியாகவே செல்ல வேண்டும்.

ஆனால் வேளச்சேரி ரயில் நிலையத்தைதாண்டி, மேம்பாலம் கடந்து பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையை நோக்கி செல்லும் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அங்கு நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் முக்கிய காரணம் என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வந்தனர். ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், துரைப்பாக்கத்தை இணைக்கும் முக்கியமான இந்த சாலையில், காய்கறி வாங்க செல்வோர், வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்வதால், பீக் அவர்ஸ் என்று அழைக்கப்படும் 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையான நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

எனவே கைவேலி முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். அதேபோல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை தாண்டி, மேடவாக்கம் கூட்ரோடு சந்திப்பு வரை சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் வாகனங்கள் காலையிலும், மாலையிலும் செல்ல முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள், காரில் செல்வோர் இந்த சாலையை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. இந்த சாலையில் உள்ள ஆக்கிரிமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். இந்நிலையில் வேளச்சேரி ரயில் நிலையம் தொடங்கி பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை பள்ளிக்கரணை போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+