தங்கையின் கணவருடன் கள்ளக்காதல்.. கடைசியில் விபரீத முடிவெடுத்த பெண்.. அனாதையான குழந்தைகள்!
சென்னை: தங்கையின் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம். பெயிண்டராக இருக்கிறார்.
இவரது மனைவி செண்பகவல்லி. இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். செண்பகவல்லியின் தங்கை லாவண்யா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தங்கையின் கணவர்
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையே இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்ற லாவண்யாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. ஆனால் லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை இழந்த நிலையில் கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் பரிதவித்த ஜோசப், லாவண்யாவின் அக்காள் செண்பகவல்லி வீட்டு மாடியில் தங்கி இருந்துள்ளார்.

கள்ளக்காதல்
அப்போது ஜோசப்புக்கும், செண்பகவல்லிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக தவறான பழக்கம் இருந்துள்ளது. இதனை செண்பகவல்லி அறிந்ததும் அவருக்கும், ஜோசப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த செண்பகவல்லி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீடியோ வெளியிட்டார்
தற்கொலை செய்வதற்கு முன்பு செண்பகவல்லி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனது தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் தன்னை அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் செண்பகவல்லி கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவை கணவர் பொன்னுரங்கத்துக்கும் அவர் அனுப்பி இருக்கிறார்.

கைது செய்தனர்
இது குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார் செண்பகவல்லி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செண்பகவல்லியின் கணவர் பொன்னுரங்கம் மனைவியின் உயிரிழப்பு குறித்து சோமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் , தற்கொலை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோசப்பை இன்று கைது செய்தனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications