'ஏன் என்கூட பேசுமாட்டுற தாரணி'.. மறைமலைநகரே ஆடிப்போச்சு. வீடு புகுந்து கள்ளக்காதலன் செஞ்ச வேலை
சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் குழந்தையின் கண் எதிரே கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர், போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள நின்னக்கரை ராஜீவ் காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன் (26). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மல்ரோசபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் சுதின் உடற்பயிற்சி நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சுந்தர், சுதின் இருவரும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள் ஆவர். இதன் காரணமாக சுந்தர் வீட்டுக்கு சுதின் அடிக்கடி வந்து சென்றார்.
இந்நிலையில் சுந்தரின் மனைவி தாரணிக்கும் சுதினுக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பின்னாளில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இவரும் அடிக்கடி சந்தித்து சந்தோஷமாக இருந்துள்ளனர். இதனிடையே அடிக்கடி சுதின் தனது கள்ளக்காதலி தாரணியை தனிமையில் சந்தித்து வருவதை ஒருகட்டத்தில் சுந்தரேசன் கண்டுபிடித்தார்.
தனது நண்பர் சுதின் தனது மனைவி தாரணி ஆகியோரை அழைத்து சுந்தரேசன் கண்டித்துள்ளார்.ஆனால் சுந்தரசனின் வார்த்தைகளை மீறி இருவரும் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளனர்.
ஆனால் திடீரென சுதினை, அவரது கள்ளக்காதலி தாரணி உதாசீனப்படுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. முற்றிலும் தன்னை வேண்டாம் என்று விலகுவதை சுதினால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுதின் செவ்வாய்கிழமை மதியம் வழக்கம் போல் தனது நண்பர் சுந்தர் வீட்டுக்கு கள்ளக்காதலி தாரணியை பார்ப்பதற்காக போயிருக்கிறார்.
அப்போது சுந்தர் வேலைக்கு சென்றிருந்தார். தாரணி மற்றும் அவரது 2 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது சுதின், கள்ளக்காதலி தாரணியிடம் ஏன் என்னுடன் முன்பு போல் பேசுவது இல்லை. என்னை தவிர்ப்பது ஏன் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு தாரணி சொன்ன பதிலால் ஆத்திரம் அடைந்த சுதின், தாரணியை அவரது 2 வயது மகள் கண் முன்னே கத்தியால் வெட்டியும், அரிவாள்மனையால் கழுத்தை அறுத்தும் கொலை செய்திருக்கிறார்.
இதில் தாரணி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சுதின் அங்கிருந்து நேராக மறைமலைநகர் போலீஸ் ஸ்டேசனில் போய் சரண் அடைந்து அங்கு இருந்த போலீசாரிடம் கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதினிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த தாரணியின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications