உதயநிதி கேட்டதில் தவறு இல்லை.. முதல்வரிடம் நானும் வலியுறுத்துவேன்.. டிஆர் பாலு என்ன சொன்னார் பாருங்க
சென்னை: லோக்சபா தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி கேட்டதில் தவறு இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நானும் முதல்வரிடம் கூறுவேன் என்று திமுக எம்பி டிஆர் பாலு கூறினார்.
லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி இன்று பேச்சு வார்த்தை நடத்தியது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், கேஎஸ் அழகிரி உளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக தரப்பில் டிஆர் பாலு தலைமையில் கேஎன் நேரு, ஐபெரியசாமி, பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக எம்பி டிஆர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது இந்தியில் தான் பேச வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறினார். நாங்கள் அப்போதும் கூட கூட்டணி நலனுக்காக சகித்துக்கொண்டோம். காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பற்றி கேட்கிறீர்கள். எல்லா கட்சியும் அதிகமான இடங்களில்தான் நிற்க வேண்டும் என விரும்பும்.
நான் கூட திமுக 40 இடங்களிலும் நிற்க வேண்டும் என விரும்புவேன். பேச்சுவார்த்தை என்று வரும் போது அனைவருடன் இணைந்து செல்ல வேண்டும். அதுதான் கூட்டணி. திமுக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். கட்சித் தலைமையும் அதைத்தான் விரும்பும்.
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி கேட்டதில் தவறு இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நானும் முதல்வரிடம் கூறுவேன். மக்கள் கூட்டணி மய்யம் கூட்டணியில் இணைய உள்ளதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நிதிஷ்குமார் பிரதமராக வேண்டும் என்று சொல்லவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே!












Click it and Unblock the Notifications