தீபாவளிக்கு இதற்கு கட்டுப்பாடு இல்லை.. எப்ப வேணாலும் பத்த வைக்கலாம்
சென்னை: தீபாவளி நாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் மத்தாப்பு, புஸ்வாணத்துக்கு எவ்விர நேரக்கட்டுப்பாடும் இல்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே அது பட்டாசுதான். ஆனால் பட்டாசுகள் வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிமன்றம் நாடு முழுவதும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து 3 மணி நேரமாக நீட்டிக்க தமிழக அரசு கேட்டு கொண்டது.

உத்தரவு
அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந் நிலையில் காலை 4 முதல் 5 மணி வரையும் இரவு 9 முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் நிர்ணயம் செய்தது. வேண்டுமானாலும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழிப்புணர்வு
இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்டாசு வெடிக்க தடை
அப்போது தீயணைப்பு துறை டிஜிபி மகேந்திரன் கூறுகையில் பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பின்னர் சத்தமாக வெடிக்கும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

புஸ்வாணம்
மத்தாப்பு புஸ்வாணம் உள்ளிட்டவற்றை வெடிக்க தடை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அது போல் ராக்கெட்டுகளுக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்றார். இதனால் குட்டீஸ்களும் இளைஞர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications