ஆணவத்துடன் முறைத்து நின்றார்.. அடி வாங்கினார்! வழக்கறிஞர் தாக்குதல் சர்ச்சையில் திருமாவளவன் விளக்கம்
சென்னை: சாலையில் சென்ற பைக் மீது தனது கார் மோதியதாக எழுந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார். டூ வீலரில் வந்த வழக்கறிஞர் ஒருவர், காவலர்கள் சொன்னதை கேட்காமல் ஆணவத்துடன் முறைத்ததால் , நான்கு தட்டுத் தட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து விசிக வழக்கறிஞர் அணி சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருந்தார். இந்த போராட்டத்தை முடித்து புறப்படும் போது, திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது உரசியதாக கூறப்படுகிறது.

இதனால் கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட, திருமாவளவனின் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர் இடையில் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், வழக்கறிஞர் வேண்டுமென்றே பைக்கை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை உள்ளிட்டோர் பேசியதால், பலரின் கவனம் திரும்பியது.
இந்த நிலையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதில் திருமாவளவன் பேசுகையில், ஒரு கட்சித் தலைவர்.. அவரின் காரின் முன்பு சென்று ஒருவர் பைக்கை நிறுத்துகிறார்.. அவரின் பாதுகாப்பு தொடர்பாக எவனும் கேள்வி கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் இறங்கி சென்று தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி முன்பு ஒருவர் சென்று பைக்கை நிறுத்தினால், இப்படி கேள்வி எழுப்புவார்களா?ஒரு நிமிடம் கூட இல்லை.. என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. அவன் வந்து நின்று முறைத்தான்.. யாராக இருந்தால் என்ன என்று கேட்டான்.. அவர்களிடம் முறைத்ததால் அவர்கள் அடித்தார்கள்.. அவன் என்ன சாதி, என்ன மதம் என்று கூட தெரியாது.. ஓரமா நில்லுங்க என்று போலீசார் கேட்கிறார்கள்..
அவர்களிடமும் முறைக்கிறான்.. யாராக இருந்தால் என்ன என்று முறைத்தான்.. முறைத்து பார்த்ததால் தான் அடி வாங்கினான்.. அவ்வளவு திமிராடா உனக்கு.. ஆணவமாடா உனக்கு.. என்றுதான் அடித்தார்கள்.. வெறும் 4 அடிதான்.. ஒழுங்காக கூட அடிக்கவில்லை.. உடனே அவன் மயக்கம் போட்டு நெஞ்சு வலிக்கிறது என்று நாடகமாடுகிறான்.. என்ன நாடகம் பாருங்க..
போலீசாரிடம் நானே தெரியாமல் பண்ணிவிட்டான் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.. நமது ஆட்களையும் அமைதிப்படுத்தினேன்.. உடனே திருமாவளவன் தான் அடிக்க சொன்னாரு என்கிறார்கள்.. அடங்க மறு என்று தான் சொல்லி இருக்கிறேன்.. எந்த இடத்திலும் வன்முறையை தூண்டியதில்லை.. அடங்க மறு என்பது ஒரு அரசியல் என்று தெரிவித்துள்ளார்.
-
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications