Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அவ்வளவு நேர்மையானவர்களா.. மோடியும், அமித்ஷாவும்?” திருமாவளவன் சரமாரி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அரசு அதிகாரிகளை, சட்டம் சொல்வதை போல வேலை செய்ய விடும் அளவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேர்மையானவர்களா?" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் பங்கேற்ற பேசிய திருமாவளவன் மேற்குறிப்பிட்ட விமர்சனங்களை அடுக்கியிருக்கிறார்.

Thirumavalavan BJP VCK

மேலும் அவர் பேசியதாவது, "இப்போது மோடிக்கும். அமித்ஷாவுக்கும் வேண்டியவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை பீடத்தில் இருக்கிறார் என்றால்.. அவங்க இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாம இருப்பாங்களா? மோடியும், அமித்ஷாவும், பாஜக தலைவர்களும், சங்பரிவார் தலைவர்களும் அவ்வளவு நேர்மையானவர்களா?

'நீங்க அரசு அதிகாரிகள், நாங்க அரசியல்வாதிகள். நமக்கிடையில் அந்த அளவு மட்டும் உறவு இருந்தா போதும். என்ன சட்டம் சொல்லுதோ அப்படியே செயல்படுங்க' என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேர்மை, திறம் வாய்ந்த அரசியல் தலைவர்களா அவர்கள்? இன்ஃப்ளுயன்ஸ் பண்ணவே மாட்டார்களா?

தோழர்களே தேர்தல் ஆணையமும், பாஜகவும் இன்றைக்கு ஒரே நிறுவனம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மாறி இருக்கிறது. தேர்தல் ஆணையமும் மத்திய அரசின் ஆட்சியாளர்களும் ஒரே நோக்கத்திற்காக செயல்படக்கூடியவர்களாக வெளிப்படையாக இயங்குகிறார்கள். ஆகவே இது வெறும் வாக்காளர் பட்டியலை சீர் செய்கிற நடவடிக்கை அல்ல. வாக்காளர்களை அதிகமாக சேர்ப்பதற்குரிய முயற்சி அல்ல. போலி வாக்காளர்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சி அல்ல. அந்நிய தேசங்களிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களை வாக்காளர்களாக மாறுவதை தடுக்கிற முயற்சி அல்ல.

பாஜகவுக்கு ஒரு தேசிய மக்கள் பெயரேடு தேவைப்படுகிறது. அவர்கள் விரும்புகிற இந்தியாவை கட்டமைப்பதற்கு, சிஐஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை சிதைத்துவிட்டு, மனுவின் கனவை நனவாக்குவது அவர்களின் இறுதி லட்சியம். கோல்வாக்கரின் கனவை நனவாக்குவது அவர்களின் இறுதி லட்சியம். அதை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கு தேசிய குடிமக்கள் பேரேடு தேவைப்படுகிறது.

மாற்று கருத்துள்ளவர்களை பலவீனப்படுத்த வேண்டும். எதிர்கருத்து பேசுகிறவர்களை வீழ்த்த வேண்டும். எழுந்திருக்க விடாமல் அவர்களின் இடுப்பெலும்பை முறிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் வலிமை பெற்று விடாமல் தடுக்க வேண்டும்.

இடதுசாரி அரசியலோ, திராவிட அரசியலோ, அம்பேத்கரிய அரசியலோ, பெரியாரிய அரசியலோ, தேசியவாத மொழிவழி தேசியவாத அரசியலோ, தலைதூக்கி விடக்கூடாது. இவையெல்லாம் அவர்கள் விரும்புகிற ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்கிற கனவை நடவாக்குவதற்கு தடைக்கற்களாக இருக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள். ஆகவே பன்மைத்துவத்தை, மதச்சார்பின்மையை, அரசமைப்பு சட்டத்தை சிதைப்பது. தெளிவாக சொல்ல வேண்டுமானால் அம்பேத்கரின் கனவை சிதறடிப்பது. எனவேதான் நாம் பாஜகவையும், சங்பரிவார்களை எதிர்க்கிறோம்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் நாங்கள் விடுக்கிற வேண்டுகோள், எஸ்ஐஆரை நிறுத்துங்கள், கைவிடுங்கள். வழக்கமான சம்மரி ரிவிஷன் என்கிற முறையை நடைமுறைப்படுத்துங்கள். பாஜாகவோடு கூட்டு சேர்ந்து செய்கிற சதி முயற்சியை முற்றாக கைவிடுங்கள் என்பதே விடுதலை சிறுத்தைகளின் வேண்டுகோள். மக்களை திரட்டி போராடி தடுப்பதற்குரிய கால அவகாசம் இல்லை, அதனால் நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+