இன்று தலித்- இசுலாமியர் எழுச்சிநாள்! நாடக அரசியலுக்காக அம்பேத்கருக்கு பாஜக அஞ்சலி! திருமா பாய்ச்சல்!
சென்னை: ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதியை 'தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாளாக' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடைபிடித்து வருவதாகவும் இந்த நாளில் சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் எனவும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்கள் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாடக அரசியலைச் செய்து வருவதாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அம்பேத்கர் நினைவுநாள்
திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளில், அவர் புதிய இந்தியாவைக் கட்டமைத்திட ஆற்றியுள்ள அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
அத்துடன், சனாதன சங்பரிவார்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் இதே நாளாகும். ஆகவேதான், ஆண்டுதோறும் இந்நாளை 'தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாளாக' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடைபிடித்துவருகிறது.

அநாகரிக வெறுப்பு அரசியல்
சிறுபான்மையினரின் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திட இயலும் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அத்தகைய போற்றுதலுக்குரிய சனநாயகப் பாதுகாவலரின் நினைவுநாளான இந்நாளில் சங்பரிவார்களின் அநாகரிக வெறுப்பு அரசியலுக்கு எதிரான - சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கிறது.

திருமா வேண்டுகோள்
அதாவது, அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே அம்பேத்கர் சிலைகளுக்கு அல்லது அவரது உருவப் படங்களுக்கு மாலையணிவித்து-மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்திற்கான உறுதிமொழியையும் இயக்கத் தோழர்கள் ஏற்றிடவேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்கள் ஒருபுறம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாடக அரசியலைச் செய்து வருகின்றனர். அதே வேளையில், இன்னொருபுறம் அவரது சமத்துவக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அழித்தொழிப்பதிலே குறியாக உள்ளனர்.

சமூக நல்லிணக்கம்
எனவே, இதனை முன்னுணர்ந்து அவர்களை வெகுமக்களிடையே அம்பலப்படுத்துவதில் உறுதியாகச் செயல்படுவோம். அதற்கான ஒரு நாளாக இந்நாளைக் கடைபிடிப்போம்! சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம்!
-
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 விசிக வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications