பொதுசிவில் சட்டம் போல நாடு தழுவிய மதுவிலக்கு சட்டம் சாத்தியம் இல்லையா? பாஜகவுக்கு திருமாவளவன் கேள்வி
சென்னை: அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற தங்களுக்கு உரிமை உண்டு என மத்திய பாஜக அரசு கூறி வருகிறது; பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற எந்த அரசியல் சாசனத்தின் பிரிவுகள் பயன்படுத்தப்படுகிறதோ அதையே பயன்படுத்தி இந்திய அளவில் மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அக்டோபர் 2 மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக கோரிக்கை மனுவை திருமாவளவன், ஸ்டாலினிடம் வழங்கினார். இதனையடுத்து விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவும் பங்கேற்கும் என திருமாவளவனிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யார் எல்லாம் மதுவிலக்கில் உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது பொதுவான அறைகூவல். இதை தேர்தலுடன் முடிச்சுப் போடவேண்டாம். இதை எல்லோரும் சேர்ந்து பேசுவோம். மத்திய அரசுக்கு இதில் அழுத்தம் கொடுப்போம். மதுவிலக்கு விவகாரத்தில் மத்திய அரசு தமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்கிற போக்கில் இருக்கிறது. இந்தியா முழுவதுமே போதைப் பொருள் புழக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் 4 மாநிலங்களைத் தவிர மதுபான வியாபாரத்தை அரசே முன் நின்று நடத்துகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பு இருக்கிறதா? இல்லையா?

அரசியல் சாசனத்தின் 47-வது பிரிவு 4-ன் கீழ் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அப்படி அந்த சட்டத்தின் கீழ் பொது சிவில் சட்டம் உருவாக்க உரிமை இருக்கிற மத்திய அரசுக்கு ஏன் இதே பிரிவை பயன்படுத்தி மதுவிலக்கு தொடர்பான ஒரு தேசிய கொள்கையை உருவாக்க முடியாது? இதுதான் எங்கள் கேள்வி. அதற்கு ஏன் ஒரு தனிச்சட்டம் கொண்டுவரக் கூடாது? இதுதான் விடுதலை சிறுத்தைகள் கேள்வி. இதில் திமுக உடன்படுவதால் எங்கள் மாநாட்டில் திமுக பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். இந்த மாநாட்டுக்கு 2 பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்திருக்கிறார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்? ஸ்டாலின் - விஜய் தான் காரணமா? பின்னணியில் 3 முக்கிய மேட்டர் -
விசிகவில் 3 சிட்டிங் எம்எல்ஏவுக்கு சீட் மறுப்பு.. நேரடியாக களமிறங்கும் திருமாவளவன்.. பாவம் ஷாநவாஸ்! -
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.!












Click it and Unblock the Notifications