Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மதுரை ஆட்சியர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கத்தில் இப்படி செய்யவில்லை என்றும், மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாலேயே 144 தடை உத்தரவு போடப்பட்டதாக மதுரை ஆட்சியர் நீதிமன்றத்தில் கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என்பதால் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

Thiruparankundram

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அவமதித்ததாக மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத சூழல் அன்று ஏற்பட்டது என்றும், அதன் காரணமாகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது என்றும் கூறியிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவினை மீற வேண்டும் என்று வேண்டும் என்றே இதனை செய்யவில்லை. அப்போது இருந்த சூழல் காரணமாகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது. சட்டம் ஒழுங்கு, அமைதி, மத கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பித்தோம். தவறாக இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. தீபம் ஏற்றும் நாளில் போலீசாரின் பேரி கார்டுகளை எல்லாம் தூக்கி எறிந்தனர்.

அடுத்தடுத்து வந்த பிரச்சினைகள், மத கலவரம் ஏற்படும் சூழல் இருந்தது. இதனாலேயே நாங்கள் அவ்வாறு 144 தடை உத்தரவு பிறப்பிக்க இருந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதேபோல் காவல் ஆணையர் லோகநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான பதில் மனுவில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த தகவலே இடம்பெற்றிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+