திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மதுரை ஆட்சியர்!
சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கத்தில் இப்படி செய்யவில்லை என்றும், மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாலேயே 144 தடை உத்தரவு போடப்பட்டதாக மதுரை ஆட்சியர் நீதிமன்றத்தில் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என்பதால் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அவமதித்ததாக மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத சூழல் அன்று ஏற்பட்டது என்றும், அதன் காரணமாகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது என்றும் கூறியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவினை மீற வேண்டும் என்று வேண்டும் என்றே இதனை செய்யவில்லை. அப்போது இருந்த சூழல் காரணமாகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது. சட்டம் ஒழுங்கு, அமைதி, மத கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பித்தோம். தவறாக இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. தீபம் ஏற்றும் நாளில் போலீசாரின் பேரி கார்டுகளை எல்லாம் தூக்கி எறிந்தனர்.
அடுத்தடுத்து வந்த பிரச்சினைகள், மத கலவரம் ஏற்படும் சூழல் இருந்தது. இதனாலேயே நாங்கள் அவ்வாறு 144 தடை உத்தரவு பிறப்பிக்க இருந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதேபோல் காவல் ஆணையர் லோகநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான பதில் மனுவில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த தகவலே இடம்பெற்றிருந்தது.
-
மிகக்குறைந்த விலையில் நாப்கின்கள்? ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு தகவல் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications