திருப்போரூர் துப்பாக்கி சூடு.. போலீசார் விசாரணை.. காயமடைந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்!
சென்னை: நேற்று நடந்த திருப்போரூர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரின் வீட்டிற்கு அருகே இருக்கும் இமயம்குமார் என்பவர் இடையே இருந்த நிலத்தகராறு காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இமயம்குமார் மற்றும் தேமுதிக நிர்வாகி தாண்வமூர்த்தி இணைந்து அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் பணியை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் அங்கு எம்எல்ஏ இதயவர்மன் வீடு அருகே இருக்கும் அரசு நிலத்தை இதயகுமார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். திமுக எம்எல்ஏ இதயவர்மன் இதை தட்டிக்கேட்டு இருக்கிறார்.
அதோடு திமுக எம்எல்ஏ இதயவர்மனின் அப்பா லட்சுமிபதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதுதான் துப்பாக்கி சூட்டில் முடிந்துள்ளது. இதயம்குமாரின் நில அபகரிப்பை தடிக்கேட்க எம்எல்ஏவின் அப்பா லட்சுமிபதி அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது இமயம்குமார் ஆட்கள் லட்சுமிபதியை அரிவாளால் தாக்க வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கு இருந்தவர்களை நோக்கி லட்சுமிபதி குருவிகளை சுடும் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இது தொடர்பாக இமயகுமார் தரப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த அமமுக நிர்வாகி தாண்டவமூர்த்திதான் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த துப்பாக்கி சூடு காரணமாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீதும் அவரின் தந்தை லட்சுமிபதி மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
அதேசமயம் தாண்டவமூர்த்தி மற்றும் இதயகுமார் ஆட்கள், திமுக எம்எல்ஏ இதயவர்மனின் அப்பாவை அரிவாளால் வெட்ட வந்தது தொடர்பாகவும் புகார் உள்ளது. இதை போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதோடு தாங்கள் தற்காப்பிற்காவே துப்பாக்கி சூடு நடத்தினோம் என்று லட்சுமிபதி கூறியுள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பையூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் போலீசார் விசாரிக்க சென்றார்கள். ஆனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து போலீசார் வருவதற்கு முன்பே சீனிவாசன் தப்பி ஓடியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை போலீசார் விசாரிக்க சென்ற போது, அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்.
-
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்











Click it and Unblock the Notifications