பிளஸ் 2 தேர்வு: மாவட்ட வாரியாக தேர்ச்சி! திருப்பூர் முதலிடம்! கடைசி இடம் எந்த மாவட்டம்?
சென்னை: தமிழகத்தில் அதிக தேர்ச்சி சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்றைய தினம் நீட் தேர்வும் நடந்து முடிந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கக்கத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்டார்.
7.72 லட்சம் பேரில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 3,25,305 பேர் தேர்வு எழுதினர். அது போல் 3,93,890 மாணவிகள் தேர்வு எழுதினர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார்.
இவர்களில் மாணவர்கள் 92.37 சதவீதமும் மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் மொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.07 சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி அடைந்துவிட்டார்.
பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி விகிதங்களை கொண்ட மாவட்டங்கள் எவை தெரியுமா?
திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் முதலிடத்தையும் சிவகங்கை, ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும் அரியலூர் 97.25 சதவீதத்துடன் 3ஆம் இடத்தையும் கோவை 96.97 சதவீதத்துடன் 4ஆம் இடத்தையும் நெல்லை, பெரம்பலூர் தலா 96.44 சதவீதத்துடன் 5ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 91.32 சதவீதம், சென்னை 94.48 % திருவண்ணாமலை 90.47 சதவீதமும் வேலூரில் 92.53 சதவீதமும் திருப்பத்தூரில் 92.34 சதவீதமும் ராணிப்பேட்டையில் 92.28 சதவீதமும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசி இடம் திருவண்ணாமலை மாவட்டத்திற்குதான். கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.71 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 91.32 சதவீதம், சென்னை 94.48 % திருவண்ணாமலை 90.47 சதவீதமும் வேலூரில் 92.53 சதவீதமும் திருப்பத்தூரில் 92.34 சதவீதமும் ராணிப்பேட்டையில் 92.28 சதவீதமும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 94.27 சதவீதமும் சேலத்தில் 94.60 சதவீதமும் நாமக்கல் 96.10 சதவீதமும் கிருஷ்ணகிரி 91.87 சதவீதமும் தருமபுரி 93.55 சதவீதமு் புதுக்கோட்டை 93.79 சதவீதமும் கரூர் 95.90 சதவீதமும் திருச்சி 95.74 சதவீதமும் நாகை 91.19 சதவீதமும் மயிலாடுதுறை 92.38 சதவீதமும் திருவாரூர் 93.08 சதவீதமும் தஞ்சை 93.46 சதவீதமும் விழுப்புரம் 93.17 சதவீதமும் கள்ளக்குறிச்சி 92.29 சதவீதமும் கடலூர் 94.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தை பிடித்தது திருவண்ணாமலை மாவட்டம். கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications