காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார்... கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
சென்னை: கறுப்புச் சாயம் அடித்தால் அன்னம் காகமாகி விடாது என்று வைரமுத்து கூறியுள்ளார். காவிச்சாயம் அடித்தால்
திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெசன்ட் நகரில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார்.

நமது தாய்மொழியான தமிழின் அடையாளமே அய்யன் திருவள்ளூவர்தான். திருக்குறள் என்னும் அரிய பொக்கிஷம் மூலம் மனித வாழ்வு முழுவதும் இந்த காலத்துக்கு மட்டுமின்றி எக்காலத்துக்கும் உதவும் வகையில் எடுத்து கூறி இருப்பார் திருவள்ளூவர். அய்யன் திருவள்ளுர் தினம் ஆண்டுதோறும் தை 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை கடற்கரை சாலையில் திருவள்ளுவர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
கவிப்பேரரசு வைரமுத்து சென்னை பெசன்ட் நகரில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனது ட்விட்டர் பக்கத்தில் பெசன்ட் நகரில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினோம்.

பாடகர் உன்னி கிருஷ்ணன் குறள் இசை வழங்கினார் துணைவேந்தர் திருவாசகம் உட்படத் தமிழன்பர்கள்
கலந்து கொண்டனர்.
"கறுப்புச் சாயம் அடித்தால் அன்னம் காகமாகி விடாது. காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிடமாட்டார்"என்றேன் என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து












Click it and Unblock the Notifications