திடீரென வேகம் குறைந்த தமிழிசை.. கம்மென்று இருக்கும் பாஜக.. திருவாரூரில் போட்டியா, இல்லையா?
Recommended Video

சென்னை: கூட்டி கழித்து பார்த்தால் திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என்றே தெரிகிறது.
திருவாரூர் தேர்தலுக்கு பிரதான கட்சிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. ஆனால் சத்தமே இல்லாமல் இருக்கிறது நாட்டை ஆளும் பாஜக. குறிப்பாக மாநில தலைமை!!
திருவாரூர தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு கணமே தமிழிசை சவுந்தராஜன் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில் "திருவாரூரில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வாக்குகளாக அளிப்பார்கள்" என்று சொல்லி இருந்தார்.

ஆர்வம் இல்லையா?
இந்த ஒரு ட்வீட்டிலேயே ஓரளவு தெரிந்துவிட்டது அவர் போட்டியிடுவாரா, மாட்டாரா என்று.
பிறகு செய்தியாளர்களும் நேரடியாகவே கேட்டுவிட்டார்கள், போட்டியிட போகிறீர்களா என்று. ஆனால் இதுவரை போட்டியிடுவதாக உறுதியாக எதுவும் சொல்லவில்லை. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிவிட்ட நிலையில், போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை என ஒரு கட்சி கூறுவது அது போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்பதைதான் தெளிவுபடுத்துகிறது.

ஏன் தயக்கம்?
போட்டியிட்டால் விளைவுகள் ஆர்.கே.நகர் போல இருக்குமா? அல்லது அதைவிட மோசமாக இருக்குமா? என பாஜக தயங்குகிறதா என தெரியவில்லை. ஆனால் ஸ்டாலினின் ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒவ்வொரு சொல்லுக்கும் பதிலடி கொடுத்து கொண்டிருந்த தமிழிசை இந்த விஷயத்தில் மட்டும் ஸ்டாலினை எதிர்க்க தயங்குவது ஏன் என விளங்கவில்லை.

கேள்வி எழுப்புகின்றனர்
தமிழகத்தில் பாஜக வீழ்ச்சியடையவில்லை, மோடி அலை குறையவில்லை, வெற்றிகரமான தோல்வி என்றெல்லாம் இதுநாள் வரை பேசி வந்த தமிழிசை சவுந்தராஜன், திருவாரூர் தேர்தல் விஷயத்தில் "ஆஃப்" ஆகி கிடப்பது ஏன் என நெட்டிசன்களே கேள்வியை எழுப்பி வருகின்றனர். அதோடு, துணிவிருந்தால் திருவாரூர் தொகுதியில் நின்று பாஜக ஜெயித்து காட்டட்டுமே என்று பகிரங்க சவாலும் எழுப்பி வருகின்றனர்.

கருணாநிதி தொகுதி?
இதற்கெல்லாம் தமிழிசை சவுந்தராஜன் என்ன பதில் சொல்ல போகிறார்? ஒருவேளை மறைந்த கருணாநிதியின் தொகுதி என்பதால் அதற்கு மதிப்பளித்து ஒதுங்கி இருக்கிறாரா? அல்லது கடைசி நேரத்தில் வேட்பாளரை அறிவிப்பாரா? என தெரியவில்லை. ஆனால் ஒரு தொகுதியில் நிற்பதற்கே இவ்வளவு யோசனையும், தயக்கமும் இருக்கும்போது, வரப்போகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எப்படி பாஜக எதிர்கொள்ளும் என்ற சாதாரண, அடிப்படை, யதார்த்த கேள்வி மக்களுக்கு எழுந்து செல்லாதா?

மாநில தலைமை
எனவே திருவாரூர் இடைத்தேர்தலை தமிழக பாஜக சந்திக்க வேண்டும், தமிழகத்தில் அக்கட்சிக்கு மக்கள் என்ன மரியாதை, என்ன செல்வாக்கை, என்ன பெயரை, என்ன மதிப்பை எடை போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை குறைந்தபட்சம் மாநில தலைமையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் பேச்சுதானோ?
அப்போதுதான் வரப்போகிற பெரிய பெரிய தேர்தல்களை சரியான விதத்தில் கையாண்டு, அதற்கான வியூகத்தையும் அமைக்க முடியும். இல்லையென்றால், தமிழிசை ட்விட்டரில் ஸ்டாலினிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது வெறும் பூச்சாண்டியா என்றும், "பேச்சு வெறும் பேச்சாகத்தானா?" என்றும் தமிழக மக்கள் நினைத்துவிடுவார்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications