குடிநீர் பஞ்சத்தை போக்க அதிக நிதி ஒதுக்கீடு... அசத்தும் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.
சென்னை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சத்தை போக்க அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடும் நிலையில், மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய அவல நிலை உள்ளது. கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் குடிநீர் பஞ்சம் ஓய்ந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், திருவெறும்பூர் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதுடன், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முன்னுரிமை அளித்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடராஜபுரம், குண்டூர் உள்ளிட்ட கிராமமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி அன்பில் மகேஷிடம் முறையிட்டனர்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அன்பில் மகேஷ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்ட மதிப்பீட்டிற்கு தேவையான தொகையை ஒதுக்கி சம்மந்தபட்ட கிராமங்களின் தேவைக்கேற்ப ஆழ்துளைக் கிணறு, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைத்துக்கொடுத்துள்ளார்.

இதனிடையே அந்தப் பணிகள் எல்லாம் முடிவடைந்ததை அடுத்து அதனை நேரில் பார்வையிட்ட அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ., கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, ஆழ்த்துளை கினறு உள்ளிட்டவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு அளித்துள்ளார். மேலும், அடுத்த 6 மாதத்திற்குள் தனது தொகுதியில் குடிநீர் பிரச்சனையை முற்றிலும் களைய பல்வேறு திட்டங்களை தயார் செய்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் தான் அவருக்கு போதிய ஒத்துழைப்பு நல்குவதில்லை எனவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications