சென்னையை சூழ்ந்துள்ள சிவப்பு தக்காளிகள்.. வேலூரில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டும் மழை.. வெதர்மேன்!
Recommended Video
சென்னை: சென்னையை சூழ்ந்துள்ள மழை மேகங்களால் இந்த நாள் ஓர் அற்புத நாளாக இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காற்றின் திசை மாற்றம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிவப்பு தக்காளி
இந்நிலையில் சென்னை மற்றும் வட தமிழகத்தின் மழை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை அறிவிப்பாளரான தமிழ்நாடு வெதர்மேன். இதுதொடர்பாக அவர் போஸ்ட் செய்துள்ள பதிவில், சென்னை சிவப்பு தக்காளியால் சூழப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

அற்புதமான நாள்
அதாவது சென்னை முழுவதும் மழை மேகங்களால் சூழப்பட்டிருப்பதை அவ்வாறு தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இது ஒரு சிறந்த நாள்
சூரிய உதயத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தால் ஆச்சரியப்படமாட்டேன். இது போன்ற நாட்கள் கிடைப்பது அரிதானது, இதனை அனுபவியுங்கள். வட தமிழகத்தின் வானிலையில் இது ஒரு சிறந்த நாள்.

பரவலாக மழை
தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் சிறந்த நாட்களில் ஒன்றுதான். பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.

இடைவிடாமல் கொட்டும் மழை
தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் கடலூர், பாண்டி உட்பட பல பகுதிகள் நல்ல மழையை பெற்றுள்ளன. வேலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.

தீவிரமாக பெய்கிறது
வேலூரில் இதுபோன்ற மழையை நான் நீண்ட காலமாக பார்த்ததில்லை. தெளிவாக தெரியாத அளவுக்கு தீவிரமாக மழை பெய்து வருகிறது.

100 ஆண்டுகளுக்குப் பிறகு
வேலூரில் 24 மணிநேரத்தில் 166 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இப்படி ஒரு மழை பெய்திருக்கிறது. 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதிதான் 24 மணி நேரத்தில் 106 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது.

எதிர்பார்க்கலாம்
காற்றின் திசையில் பெங்களூரும் உள்ளதால் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும் என அங்கும் எதிர்பார்க்கலாம். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications