சென்னையில் 30 வயதுக்கு கீழ் 3 பேர் கொரோனாவால் இன்று மரணம்- இளைஞர்களே ரொம்ப கவனம்
சென்னை: சென்னையில் கொரோனா வயது வித்தியாசமின்றி மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 30 வயதுக்கு கீழே உள்ள 3 இளைஞர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று நோயானது முதியவர்கள், நோயாளிகளைத்தான் அதிகம் பாதிக்கிறது என கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும்தான் அதிக அளவில் பாதித்து வருகிறது.

தமிழகத்தில் 12 வயது வரையிலான குழந்தைகள் 2533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் 41, 742 பேரும் 60 வயதுக்கு மேல் 5918 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா முதியவர்களை மட்டும் இல்லாமல் இளைஞர்களையும் கூட அதிகம் பாதித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 48 பேர் மரணம் அடைந்தனர். இதில் சென்னையில் 21 வயது, 24 வயது மற்றும் 25 வயது இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
30 வயது ஆண் மற்றும் 37 வயது பெண்ணும் கொரோனாவால் சென்னையில் உயிரிழந்திருக்கின்றனர். ஆகையால் கொரோனா என்பது முதியவர்களைத் தாக்கும், அதுவும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரை மிக அதிகமாக தாக்கும் என்கிற அலட்சியம் தவறானது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
கொரோனோ பாதிப்பு என்பது இளைஞர்களையும் தாக்கி உயிரை பறிக்கக் கூடியதுதான். அதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இளைஞர்களும் முழு அளவில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா நம்மை எதுவும் செய்யாது என்கிற அசால்ட்டுடன் நகர்வலம் போவது, கூடி விளையாடுவது போன்ற கூத்துகளை நிறுத்திக் கொண்டால் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications