யார் அந்த "கருப்பு ஆடு".. அடுத்தடுத்த பரபரப்பு.. ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததான புகாரில் கைது செய்யப்பட்டுள்ள காமர்ஸ் டீச்சர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது... இதையடுத்து இந்த வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் வேலை பார்த்து வந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடந்த வாரம் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது..
ஆன்லைன் வகுப்புகளின் போது அரை நிர்வாணத்துடன் இருந்ததாகவும், குளித்துவிட்டு அப்படியே வந்து மாணவிகளிடம் பேசுவதாகவும், இதில் ஒரு மாணவியை சினிமாவுக்கு கூப்பிட்டதாகவும், புகார்கள் எழுந்தன.

புகார்கள்
இந்த புகார்களை எல்லாம் ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியே சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. இவரை தொடர்ந்து, இதே பள்ளியில் இதே ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் சில மாணவிகளும் புகார்களை தந்தனர்.. இதனால் தமிழகமே அதிர்ச்சிக்கு உள்ளானது...

சலசலப்பு
ராஜகோபாலனை கைது செய்தனர்.. ஜுன் 8ம் தேதி வரை ஜெயிலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், ஆசிரியர் கைதானாரே தவிர, இந்த பள்ளி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. மற்றொருபக்கம், சாதி ரீதியாகவும் விவாதங்களும், கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் உருவெடுத்தன..

கருப்பு ஆடு
இதனிடையே, கைதான ராஜகோபாலன், "நான் பல மாணவிகளிடம் இப்படி பேசியிருக்கேன்.. இந்த பள்ளியில் இப்படி என்னை போலவே பல கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்" என்று வாக்குமூலம் தந்திருந்தார். இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தற்போது, ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்தனர்...
Recommended Video

அனுமதி
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது... இந்த 3 நாள் நடக்க போகும் விசாரணையில், ராஜகோபாலனின் லீலைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதைதவிர, அந்த கருப்பு ஆடுகள் குறித்த தகவலை பெறும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்..!
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications