வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு.. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு
சென்னை: நாட்டு மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நாளை நடைபெறுவதையொட்டி தேசம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களின் வெளி வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு படை போலீஸர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதே போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களின் உள்வளாகத்தில் காவல் அலுவலர்களும், வாக்கு எண்ணப்படும் அறைகள் உள்ள வளாகத்தில் ஆயுதமேந்திய துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ உதவிக்குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை சுமார் மூன்றாயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.
அதே போல வாக்கு எண்ணிக்கை நாளான நாளைய தினம், தமிழகத்தில் சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 2,500 போலீஸாரும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு முன்பாக சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் 2,500 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கையை அடுத்து நாளை டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications